உறந்தைவளர் நாட்டுவளப்பம்/ஆட்சிச் சிறப்பு

விக்கிமூலம் இலிருந்து
சொல்லுக்குத் தருமராம் மல்லுக்கு வீமராம்
வில்லுக் கருச்சுனர் வீர மணவாளர்
ஆர்த்தி தெரிந்தவர் அருளில் மிகுந்தவர்
கீர்த்தி யுரைக்குந்தமிழ் கேட்குஞ் செவிகொண்டு
உரையா லறிந்தவர் உறந்தை வளநாட்டில்
அரவும் எலியும்அ டைத்தா ரொருகூட்டில்
தளிகையும் கோவ்லும் தண்ணீர்த் தடாகமும்
புலியும் பசுவும்தண்ணீர் புசிக்கும் வளநாடு
தானம் பரிக்குலம் தழைக்கும்உ றந்தையில்
மானும் புலியும் வளர்த்தா ரொருகூட்டில்
வேதிய ருக்குக்கலி யாணஞ்சி றந்ததும்
சாதிக்குள் ளேபரிசம் வாரிச்சொ ரிந்ததும்
தானதரு மங்களுடன் நீதிதெ ரிந்தவர்
ஞானம் தெரிந்துஅபி மானம்து றந்தவர்
சலிக்காத் தமிழ்க்குச்செம்பொன் அளித்திட வல்லவர்
கெலிக்கும் சிங்கமுறந்தை புலிக்கொடி உள்ளவர்
வரராச கோபாலர் மனமகிழ்ந்த நன்னாடு
திருராசர் காவல்கொளும் தென்னுறந்தை நன்னாடு
ஆனைவ ளையுங்காணி அரசு பதினாறு
சேகர் மாகஒரு தாவளத்தில் வந்ததும்