நையாண்டிப் புலவர் தனிப்பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து
நையாண்டிப் புலவர் தனிப்பாடல்கள்

பாடல் 5 தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 118 & 119

பாடலுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்

பாடல் 1[தொகு]

விருத்தம்

விற்கம்பத் தடியாலும் அடியுண்டான் விண்ணவரை வேலை கொள்ளும்
நற்கம்பத் தடியாலுந் தூக்க வசையான் ஆரூர் நாதன் கோயில்
பொற்கம்பத் தடியினின்று வன்மீகத்தானை யுன்னிப் போற்றினோர்க்குச்
சொர்க்கம்பத் தடியப்பான் மோக்ஷம் பத்தடியாகத் தோற்றுந்தானே. (1)

பாடல் 2[தொகு]

கட்டளைக் கலித்துறை

செங்கை வரிச்சிலை தங்கமதைச் சம்புத்தீவு தன்னில்
எங்கு வைத்தாலும் அப்பள்ளி கொண்டான் தமிழ்க் கீவனென்றே
திங்கள் இரவி தினம் சுற்றிக் காக்கத் திரை சுருட்டுங்
கங்கைக்கு முத்தரத்தே யொளித்தான் உமை காதலனே. (2)

பாடல் 3[தொகு]

மேலாடை யின்றிச் சுவை புகுந்தால் இந்த மேதினியோர்
நூலாயிரம் படித்தாலும் எண்ணார் நுவல் பாற்கடலோ
மாலானவர் அணி பொன்னாடை கண்டு மகளைத் தந்தே
ஆலாலம் ஈந்தது தோலாடை சுற்றும் அரன் தனக்கே. (3)

பாடல் 4[தொகு]

வள்ளி கொண்டான் மயிலேறிக் கொண்டான் மதிபோலு மலை
வெள்ளி கொண்டான் விடையேறிக் கொண்டான் வண்ணவர்க்கு அமுதம்
துள்ளி கொண்டான் புள்ளில் ஏறிக்கொண்டான் சுபசோபனம் சேர்
பள்ளி கொண்டான் புகழேறிக் கொண்டான் என்று பார்க்க வென்றே. (4)

பாடல் 5[தொகு]

எல்லீசு

செந்தமிழ்ச் செலவனும் ஓராயிரம் தலைச் சேடனும் யாழ்
சுந்தரத் தோடிசை வல்லோனும் யாவரும் தோத்திரஞ் செய்
கந்தனைச் சொல்லுங் கவிராமச் சந்தரனைக் கண்டு வெட்கி
யந்தர வெற்பிழி பாதாளத்தோடி யடங்கினரே. (5)