பர்மாவில் பெரியார்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
பர்மாவில் பெரியார்







நாரா நாச்சியப்பன்









அன்னை நாகம்மை பதிப்பகம்

2/141, இரண்டாவது தெரு, கந்தசாமி நகர், பாலவாக்கம்,
சென்னை-600 041. தொலைபேசி: 4927721

முதற்பதிப்பு : டிசம்பர் 1993

இரண்டாம் பதிப்பு : செப்டம்பர் 1996


©நாரா நாச்சியப்பன்






விலை ரூ. 15-00






கவின்கலை அச்சகம்
கந்தசாமி நகர், பாலவாக்கம்
சென்னை 600 041

தொலைபேசி : 492 7721
பெரியாருடன்

பாவலர் நாரா நாச்சியப்பன்


பெரியார் சிங்கப்பூருக்குச் செல்லுமுன் இரங்கூன்
துறைமுகத்தில் எடுத்த படம்.

டிசம்பர் 1954.
மறக்க முடியாது!


பெரியார் பர்மாவுக்கு வந்தபோது அவருக்கு வரவேற்பளிக்க முடிவு செய்து - கடைசி வரை தங்கள் அரிய உழைப்பை நல்கிய பர்மா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களும் -

அவர்களில் குறிப்பிடத் தகுந்த
தோழர்களான

உதயணன், கன்னையன், நமசிவாயம், மதியழகன், சேரன், தமிழரசன் மற்றும் பலருந் தேனிக்கள்போல் ஆர்வத்துடன் ஓடி ஓடி உழைத்த பாங்கினையும் பண்பினையும் யாராலும் என்றென்றும் மறக்கமுடியாது.
முன்னுரை


நாற்பது ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றுச் செய்தி இது.

ஆம்! இந்தச் சிறிய புத்தகம் பற்றித்தான் கூறுகிறேன்.
புத்தகம் சிறியது தான்; இதன் தலைவர் பெரியார் அல்லவா?

இந்த நாட்டின் தலைவிதியை மாற்றி எழுதிவிட்ட காலத்தலைவன் அல்லவா பெரியார்!

அவர் கண்ட தன்மான இயக்கம் சாதித்திருக்கிற செயல் சாதாரணமானதா?

நாட்டில் எவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்கி விட்டது அவருடைய உழைப்பு.

சோர்வு படாத அவருடைய உழைப்பால் இன்று தமிழ்நாட்டு மக்கள் அடைந்திருக்கும் பயன் இத்தனை - இவ்வளவென்று யாரும் எண்ணிப் பார்க்க முடியுமா?

"வேறு யாரும் முன்வராததால், நான் என் தலைமேல் துாக்கிப் போட்டுக் கொண்டு செய்கிற செயல் இது" என்று அந்தச் செயல்வீரர் தன் வேலையைப் பற்றிச் சொல்லிக் கொண்டார்.

1945 ஆம் ஆண்டில் என்னுடைய பதினெட்டாம் வயதில் குடியரசு படித்த நான் பகுத்தறிவுக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டேன். நாடு விடுதலை அடைவதைவிட, மக்கள் மூடத் தனங்களிலிருந்து விடுதலை பெறுவது மிகமிகத் தேவையானது என்ற கொள்கை-சுயமரியாதைக் கொள்கை அன்று என் உள்ளத்திலே வேர் கொண்டது.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1954-ல் பெரியாரை வரவேற்று பத்துநாட்கள் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குத் தானாக ஏற்பட்டது.

அரசியல் தலைவர்களுடன் நெருங்கிப் பழகும்போது, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையால், அவர்களுடைய தனிப்பட்ட குணக்கேடுகளால், அவர்களுடைய தனிப்பட்ட ஆசா பாசங்களால் அவர்களுடைய தனிப்பட்ட பழக்க வழக்கங்களால் தொண்டர்கள் கசந்துபோன அனுபவங்கள் பல,

ஆனால் இந்தத் தலைவர் - என் அன்புத் தலைவர் - பெரியார் - இவர் ஒர் அரசியல் தலைவராக இல்லாத காரணத்தாலோ என்னவோ - ஒரு சமுதாயத் தலைவராக இருப்பதால் தானோ - தம் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாக ஆக்கிக் கொண்டிருந்தார்.

ஒளிவு மறைவு இல்லாமல் மக்களிடையிலே மிக எளிமையாக - யாரும் நெருங்கத் தக்க சூழ்நிலையிலே - என்றென்றும் மக்கள் தலைவராக - மக்கள் நலம் பற்றியே சிந்திப்பவராக - மக்களுக்காகவே தன் வாழ்வு என்ற இலட்சியம் கொண்டவராக வாழ்ந்தார் பெரியார்.

பர்மாவில் நான் இருந்தபோது பத்து நாட்கள் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 5 மணி நேரம் - மட்டுமே அவருடன் நான் இருந்தேன். அந்தப் பத்து நாட்களின் வரலாற்றுக் குறிப்புதான் இது.
அன்றைய நிலையில் போட்டிக் கழகமாக உருவெடுத்து விட்ட, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரால் இயங்கிவந்த நாங்கள் கொடுத்த வரவேற்பைச் சற்றும் மனம் கோணாமல் ஏற்றுக் கொண்ட பெருந்தன்மை -

வெளிநாட்டுக்குப் பிழைக்க வந்த நாங்கள் அவருடைய வருகையால் தொல்லைக்கு ஆளாகக் கூடாதென்ற கருத்தில் மேற்கொண்டு கூட்டங்கள் வேண்டாம் என்று மறுத்தபோது அவரிடம் காணப்பட்ட பிறர் நலம் பேணும் தகைமை -

என் அனுபவக் குறைவால் மோல்மேன் பயணம் ஏற்படுத்திய வீண்தொல்லைக்குப் பிறகு, என் மனத் துயரை அறிந்து என்னை அமைதிப் படுத்திய அந்த வாஞ்சை -

இவை எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும்பொழுது பெரியார் மீது ஏற்படுகின்ற மதிப்பு சுடச்சுடரும் பொன்போல் ஒளிர்கின்றது.

புத்தருக்குப் பிறகு இந்திய நாட்டில், மக்கள் நலம் ஒன்றே குறிக்கோளாக வாழ்ந்த ஒப்பற்ற தலைவர் பெரியாரை வரவேற்கும் வாய்ப்பும் - அவருடைய இலட்சியத் தொண்டனாக இயங்கும் நிலையும் கொண்டிருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

மக்களிடையே தன்மான உணர்வு ஏற்படுத்துதல் - சாதி மத பேதங்களைத் தகர்த்தல் - ஒருவரை யொருவர் ஏமாற்றியும், சுரண்டியும் வாழும் கொடுந் தன்மையைப் போக்கி சமத்துவ நிலையில் வாழும்படியான பொதுவுடைமைச் சமுதாயத்தை அமைத்தல் - இதுபோன்ற அவருடைய இலட்சியங்கள் நிறைவேற உழைப்பதே நம் வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும்;
இன்றைய இளைஞர்களுக்கு இப் புத்தகத்தை என் அன்புப் படைப்பாக அளிக்கிறேன்.

நடிப்பு உலகத்தை ஆராதிப்பதை விட்டு அவர்கள் நேரான பாதைக்கு வர வேண்டும்!

தன்னலம் வளர்க்கும் பக்திக் குழுக்களை விட்டு அவர்கள் இலட்சியப் பாதைக்குத் திரும்ப வேண்டும்.

இளமைப் பருவத்தினைத் திசை திருப்பி - கவர்ச்சி மயக்கம் காட்டும் பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றைப் படிக்கும் பாழான பழக்கத்திலிருந்து அவர்கள் விடுதலை பெற வேண்டும்.

காந்தியடிகள், டாக்டர் அம்பேத்கார், நேரு, நேதாஜி, சிங்காரவேலர், கோரா, பெரியார், காமராசர், பாரதியார், நாவலர் பாரதியார், அண்ணா, மறைமலையடிகள், திரு.வி.க., குருசாமி போன்ற இலட்சியவாதிகளின் வரலாறுகளைப் படிக்க வேண்டும். நாட்டுக்காக நாட்டு மக்களுக்காகச் சிந்தித்துச் செயல்பட்ட அந்த மாமேதைகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இலட்சியப் பாட்டையில் நடை போட வேண்டும்.

அந்தச் செவ்விய முயற்சியில் இளைஞர்களைத் திருப்பும் துாண்டு கோலாக இந்தப் புத்தகம் அமையுமென்றால், அதுவே எனக்குக் கிடைக்கும் பெரும் பரிசாகக் கருதி நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

அன்புள்ள,
நாரா நாச்சியப்பன்

உள்ளடக்கம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பர்மாவில்_பெரியார்&oldid=1520021" இலிருந்து மீள்விக்கப்பட்டது