பக்கம்:இரு விலங்கு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வேட்கை

109


போது அந்த ஈடுபாடும் குறையும். அன்றியும் அந்த இரண்டும் பின்னும் மிகுதியாக உள்ள ஒரு பொருன்க். கண்டால் அங்கே மன்ம் தாவும். பருவம் வருவதற்கு முன் ஒருவரை ஏற்றுக்கொண்டு உள்ளத்தில் உறவைவளர்த்து வருவதல்ை இத்தகைய அவலநிலை ஏற்படுவது இல்லே. * அவலட்சணமான கணவனே எப்படி மதிக்கமுடியும்? அழகு இல்லாத மனேவியை எப்படிப் போற்ற முடியும்?" என்ற கேள்வி எழலாம். இவன்தான் நமக்குக் கணவன்; இவள்தான் நமக்கு மனேவி' என்ற உறவு ஏற்பட்ட பிறகு அந்த உறவில்ை பருவத்தில் தோற்றும் தோற்றத்திற்கு மதிப்பு இல்லாமல் போய்விடும். கறுப்பான காய்க்கு ஒரு குழந்தை பிறந்தால் அவள் கறுப்பு என்பதற்காக அவள் என்னுடைய தாய் அல்ல என்ற எண்ணம் உண் டாவதில்லை. முட்டாளாக இருந்தாலும் தன்னுடைய தாயைத் தாயாகவே நல்ல மகன் எண்ணுகிருன். அது போலவே அகற்றவனுக இருந்தாலும், அமுகுள்ளவகை இருந்தாலும், தன்னுடைய கணவன் என்கிற பக்தியும் மதிப்பும் இளம்பருவத்திலே தோன்றிவிட்டால் அவை எப்போதும் நிகேத்து நிற்கும். அதேைலயே அவர்கள் கற்பு நெறி பிறழாமல், அன்பில் சிதைவு பெருமல் வாழ்ந்து வந்தார்கள். -

இக்காலத்திலோ கண்டதும் காதல், கொண்டதும் கோல்மாக இருக்கிறது. முன்பின் பாராதவர்கள் புறத் தோற்றத்தைக் கண்டு ஏமாந்து திருமணம் செய்துகொள் கிரு.ர்கள். பழகும்போது அவர்களுடைய இயல்போ, மந்றவைகளோ தம் இயல்புக்கு ஏற்றனவாக இராமல் முரண்பட்டால் தம் கருத்தை வேறு இடங்களில் செலுத்துகிரு.ர்கள். குடும்பும் பாழ்படுகிறது. வெளி நாட்டுக்குச் சென்று ஆங்கேயே திருமணம் செய்து கொண்டு திரும்புகிறவர்களுடைய வாழ்க்கை பெரும் பாலும் ந்ல்லறமாக இருப்பதில்லே, ஏதோ, மேல் பார்வைக்கு ஒற்றுமையாக இருப்பது போலத் தோற்றி ஒலும் உள்ளே கடல் இமுழம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/131&oldid=1402681" இலிருந்து மீள்விக்கப்பட்டது