பக்கம்:இரு விலங்கு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இரு விலங்கு


காசங்களிலும், புராணங்களிலும் வருகின்றன. ராமா யணப்போரும், பாரதப் போரும் மிகப் பெரிய போர்கள் என்று சொல்வார்கள். எல்லாவற்றுக்கும் மேலான பெரிய போர் தேவாசுரப் போர் ஆகிய சூரசங்காரப் போர் அது மிகப் பழங்காலத்தில் நடந்தது. அஞ் ஞான அழிவைக் காட்டுவதற்கு அது அடையாளமாக இருக்கிறது. ஆதலால் பண்டு அந்தக் காரியத்தைச் செய்த நீ இன்று அதன் கருத்தாகிய இந்தக் காரியத்தைச் செய்யவேண்டு மென்று இரண்டையும் சேர்த்து அருண கிரிநாதர் முருகப்பெருமானிடம் விண்ணப்பித்துக் கொள் கிறார்.

. 女 தொண்டர்கண்டு அண்டுமொண்டு உண்டுஇருக்

கும்சுத்த ஞானம்எனும் - - தண்டையம் புண்டரி கம்தரு.

வாய்சண்ட தண்டவெஞ்சூர் மண்டலம் கொண்டுபண்டு அண்டர்அண் டம்கொண்டு மண்டிமிண்டக் - கண்டுஉருண்டு அண்டர்விண்டு ஓடாமல்

வேல்தொட்ட காவலனே. - இந்தப் பாட்டில் சந்த நியம் நன்ருக அமைந்திருக் கிறது: . , , o, . (அடியவர்கள் கண்ணுல் தரிசித்து, நெருங்கி, உள்ளத் தால் மொண்டு, உயிரால் உண்டு அமைதி பெற்றிருக்கும் சுத்த ஞானமென்னும் தண்டையை அணிந்த அ ழ கி ய தாமரைபோன்ற திருவடியை அருள்வாயாக, கொடுமை யையும் தண்டனை செய்யும் இயல்பையும் வெம்மையையும் உடையசூரன் படை வியூகத்தைத் துணையாகக் கொண்டு பழங் காலத்தில் தேவர்களுடைய உலகத்தைக் கைப்பற்றிக் கொண்டு மேலும் நெருங்கி வந்து மிடுக்குடன் நிற்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/104&oldid=1283950" இலிருந்து மீள்விக்கப்பட்டது