பக்கம்:இரு விலங்கு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்ல வேட்கை

தாயும் குழந்தைகளும் கருணேமிக்க ஒரு தாய்க்குப் பல குழந்தைகள் இருந் தார்கள். அந்தக் குழந்தைகளில் ஒவ்வொன்றும் ஒவ் வொரு நோயால் துன்புற்றது. சிறிய வியாதிகளும், பெரிய வியாதிகளும் அந்தக் குழந்தைகளுக்கு இருந்தன. சில குழந்தைகள் கண்வலியால் துன்புற்றன. வேறு சில பல்வலியால் துன்புற்றன. வயிற்று வலியால் அவதியுற்ற சில குழந்தைகள் உண்டு. வயிற்றில் கட்டி விழுந்து அதல்ை துன்புற்ற குழந்தைகளே மிகுதி. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியே மருந்து வாங்கிக் கொண்டு வந்து அந்தக் கு மு ந் ைத க ளி ல் ஒவ்வொன்றுக்கும் கொடுத்து. அவற்றிற்கு வேண்டிய பரிகாரம் செய்துவந் தாள் தாய்,

ஆல்ை அவளுக்கு அடிக்கடி கட்டி வீழ்ந்த குழந்தை களப் பற்றிய நினைப்பே அதிகம். காரணம்: அந்த நோயில்ை அவஸ்தைப்படுகிற குழந்தைகளே மிகுதியாக இருந்தன. ஆகையால் மருத்துவரிடம் போகும்போதெல் லாம் அதிக நேரம் கட்டி விழுந்த குழந்தைகளைப் பற்றியே பேசிவந்தாள். அந்தக் குழந்தைகளுக்காகவே பல மருத்துவர்களைத் தேடிச் சென்ருள். ஆகவே அவளுக்குக் கட்டியைப் பற்றிய எண்ணமும் அதற்குரிய

மருந்து வாங்கும் நினேப்பும் அடிக்கடி எழும். -

பெரிய நோய் . . . அருணகிரியார் அவளைப்போல இருக்கிருர், உலகில் மக்களிடம் பல வகையான குற்றங்கள் இருக்கின்றன. தீய குணங்கள் பல. காமம்? குரோதம், லோபம், மோகம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/124&oldid=539502" இலிருந்து மீள்விக்கப்பட்டது