பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மாவின் இயல்பு 51 தேடிய புண்ணியம் பாவம் ஆகிய வினைகளால் சூழப் பெற்றவர்கள். அவரவர்தம் வினைக்குத் தக்கபடி மாறி மாறித் தேவ, மனித, விலங்கு, தாவர வடிவங்களைப் பெற்று துக்க பரம்பரைகளை அநுபவிக்கும் சம்சாரிகள் ஆவர். இவர்களை, பண்டிப் பெரும்பதியை யாக்கி வழிபாவம் . கொண்டிங்கு வாழ்வார் (இரண் திருவந். 14) (பண்டி-வயிறு, பதி-ஊர் (சம்சாரம்)) என்று குறிப்பிடுவர் பூதத்தாழ்வார். 'கண்டவற்றைத் தின்று வயிற்றை வளர்த்துக் கொண்டு. தெரியாமல் விளை யும் தங்களையும் (பழி),தெரிந்து செய்யும் குற்றங்களை t பும் மேன்மேலும் வளர்த்துக்கொண்டு இவ்வுலகில் வார்' என்பது இதன் பொருளாகும். இவர்களைப் ப்யூட்சுகள்' என்று வழங்குவதும் உண்டு. கேவலர் என்போர், ஆன்மாதுபவத்தையே பேறாகக் கொண்டு வாழ்பவர்கள், பகவதநுபவத்திற்குப் பொருந் தாததாயுள்ள உடலோடு ஒரு தனியான தேசத்தில் திரிபவர்கள். பரமபதத்தின் புறப்பகுதிகளில் வாழ்பவராக இவரைக் கொள்வர். முமுட்சுகள்; மோட்சத்தில் விருப்பமுடையவர்கள் இவர்கள். உபாசகரும் பிரபந்தர்களும் இவ்வகையைச் சார்ந்தவர்கள். இவர்களை வேதாந்த தேசிகர், பல்வினை வன்கயிற் றால்பந்த முற்றுழல் கின்றனரும் கல்வினை மூட்டிய காரண னார்பதம் பெற்றவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அர்த்த_பஞ்சகம்.pdf/80&oldid=739089" இலிருந்து மீள்விக்கப்பட்டது