பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


ஆன்ம விடுதலை கிடைக்கின்றது.

வீரமும் காதலும், அதனதன் அனுபவங்களை ஓர் எல்லைக்குள்ளேயே வளர்த்து, பிறகு உரு மாற்றங்களைப் பெறுகின்றன.

ஆனால், பக்தி என்ற அனுபவம் மட்டும், ஆன்ம விடுதலை கிடைக்கும் வரை, இறப்புக்குப் பின் பிறப்பறுக்கும் வரை, என்புருக. ஊனுருக.

வழிபாட்டு ஒழுக்கங்களை ஒம்பி, இறைஞான முக்தியில் இரண்டறக் கலக்கும்வரை, எல்லையின்றி வளர்ந்து கொண்டே போகும் சக்தி படைத்தது.

ஆன்மாவை - இறை என்று பார்க்கும் நிலையும், ஆன்மாவே - இறை என்று நம்பும் நிலையும் - அதனால் வளரும். அந்த இரு நிலைகளின் விடை என்ன தெரியுமா? இறையருள் முடிவிலாதது, பேரின்பம் பயப்பது - என்ற விளக்கமே ஆகும்.

முதலிடை கடைச் சங்கங்கள் முகிழ்த்த அவ்வக் காலங்களின் பாவாணர்களும், புலமை தவழ்ந்த சான்றாண்மையாளர்களும், கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் சைவ நாயன்மார்களும் - வைணவ ஆழ்வார்களும் - அதனதன் தொடர்பான இக்காலம் வரையுள்ள ஆன்மிக வளர்ச்சிகளால் பக்தி இயக்கங்கள் பெருகி வளர்ந்து, தமிழ் மொழியைப் பசுந்தமிழாக, கன்னித் தமிழாக வளர்த்து வந்தன.

பக்தி இயக்கங்கள் என்றால் என்ன? ஆன்ம விடுதலைக்கும், மொழி விடுதலைக்கும், நாட்டு விடுதலைக்கும் போராடிப் பெறும் பயிற்சிப் பாசறைகளே - மன உறுதிகளை பக்தி இயக்கங்களாகும்.

அதனால்தான், நமது மொழியைத் தாய்மொழி என்றும், நாட்டைத் தாய் நாடு என்றும் தாய்மை மாண்போடும் பண்போடும் போற்றி அழைக்கின்றோம்! - ஏன்?

தாயிடம் தான், ஊற்றுக் கண் போல் அன்பு சுரக்கும், பாச வேட்கைக்குரிய உண்ணீர் ஊறும்.

தாயிடம் தான், இன்பம் பெருகும்! ஈரம் அலைமோதும். தியாகம், அன்றலர்ந்த பூப் போல பொலிவுறும். அவள் மாண்பால் அவனி அக மகிழும்!

119