பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


"சிறுத்தையே வெளியே வா” என்று நான் அழைத்தேன். சிங்க இளைஞன் முகம் திருப்பி விழித்தான்.

"இங்குள்ள நாட்டுக்கு இழி கழுதைக் ஆட்சியா?" என்ற கேள்வியைக் கேட்டேன்.

"தமிழ் ஒரு பூங்கா - நான் அதில் ஒரு தும்பி” என்று அவன் பதில் கூறினான்.

"நீரோடை நிலங்கிழிக்க நெடுமரங்கள் பெரும் காடாக்க, பருக்கைக் கல்லின் பிலம் சேர, பாம்புக்கூட்டம் போராடிய பாழ் நிலத்தைப் புதுக்கியவன்' போருக்கே புறப்பட்டான்.

"இந்திக்கு தமிழ்நாட்டில் ஆதிக்கமா? நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே என்ற குரலைக் கொடுத்துக் கொண்டே - தமிழன் தொடுத்தான் மொழிப் போராட்டத்தை!

'புலியெனச் செயல் செயப் புறப்பட்டதால், எலியென இகழ்ந்தவர் நடுநடுங்கிச் செத்தார்.

தமிழக மண்ணிலே புதியதோர் கலிங்கத்துப் பரணி பாட வேண்டிய அளவுக்குப் புறநானூற்றுப் போர்ப்பறை முழங்கிற்று.

எதிரிகள் அடங்கினர். தமிழ் - தமிழ் என்ற இதயங்கள் தடந்தோள் தட்டி, அன்று முதல் இன்று வரை சூறாவளி போல் ஒலித்துக் கொண்டு வருகின்றன.

பிஞ்சுக் குழந்தைகள் முதல் வாழ்க்கையின் கிளையிலே பிய்ந்து விழ வேண்டிய நிலையிலே உள்ள கனியொத்தக் கிழவர்கள் வரை பொதிகை மலைத் தோளோடு, வடவரது மொழி ஆதிக்கத்தை முறியடித்து வருகின்றனர்.

பிழைத்தது தமிழ். அப்போது செஞ்சோற்றுக் கடனாற்ற எதிரியினிடம் சேவகம் புரிபவர்கள், வெஞ்சொல்லால் என்னை அளவுக்கு மீறித் தாக்கினர்.

விழி மடங்காவீரனாய் -பகை கண்டு மருளா செம்போத்துப் புலியாய் மாறினேன் நான்.

பாய்கின்ற ஈட்டியையே என் நெஞ்சம் பதம் பார்க்கும்.

நான் வைரக் கண்ணன் - எனது நாக்கு ஒரு நெருப்பு.

176