பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம். 97 நால்வரையும் குந்தி தேவியையும் விழித்துக்கொண்டிருக் கும் பீமனையும் கண்டாள். சிங்கம்போற் கம்பீரமான தோற் மத்தோடு பருத்துயர்த்து, ஆஜானுபாகுவாய்த் தோன்றும் பீமனைக் கண்டமாத்திரத்தில் இடிம்பி, வந்த காரியத்தை மறந்து அவன்மேல் காதல் கூர்ந்தாள். 'இவனே எனக் குற்ற காயகன்' என்ருள்; “என் சகோதரன் கட்டளையை இனி நான் செய்யேன், செய்யேன்; சகோதா வாஞ்சை யினும் கணவன் காதலே சிறந்தது”எனக் கருதினுள். இவர் களைக்கொல்வதினுல் ஒரு நாளே இன்பம்; இவர்களுள் இவனே நாயகனுகப் பெறுவதினுல் பலநாளே யின்பம்' என்று சிங் தித்தாள். இவ்வாறு சிந்தித்து கின்ற இடிம்பி இந்த இராக் கத வடிவோடு சென்ருல் இவன் நம்மை விரும்பான்’ என்று நினைத்து ஒர் அழகிற் சிறந்த மானிடப் பெண் வடிவம் எடுத்துக்கொண்டு, மெல்ல மெல்லப் பீமனை அனுகிளுள். இவ்விதம் ஓர் பூங்கொடி ஒசிந்து நடை கற்பதுபோல் கடந்து வருகின்ற அவளைப் பீமன் கண்டு, 'இவ்வனத்தில் அழகு நிறைந்த இப் பெண்மணி தனித்து வருகின்ருளே! இவள் யாரோ?” என்று ஐயுற்று அவளது அழகை வியந்து பீமனை நெருங்கிய இடிம்பி, காணத்தால்தலைகுனிந்து, புன்முறுவல் பூத்து, 'புருஷோத்தமசே! நீர் யார்? எங் கிருந்து வந்திருக்கிறீர்? இவ்விடத்தில் நித்திரை போ கின்ற தேவர்களென்று சொல்லத்தகும் இவர்கள் யார்? மடந்தைப் பருவமுடையவளாய்ப் படுத்திருக்கின்ற இப் வெண்களிற் சிறக்கவள் உனக்கு எம்முறையினள்? இது கொடிய இராக்கதர்கள் வாசம் செய்யும் இடமென்று நீங்