பக்கம்:அன்பின் உருவம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒான நாடகம் 63

குற்று இறைவன் பெருமையை மறந்து விடுவார்கள். அப் போது இறைவன் அவர்களுக்குத் தண்டனை அளிப்பான். அவர்களுடைய இன்ப வாழ்வுக்கு அசுரர்களால் இன் னல்கள் உண்டாகும்படி செய்து அறிவு புகுத்துவான். இறைவனுடைய பெருமையை நன்கு உணர்ந்து எக் காலத்தும் அவனுக்கு அடிமையாக வாழவேண்டும் என்ற நினைப்பு, அவ்வளவு பெரியவர்களாகிய வான காடர்களுக் கும் இருப்பது இல்லே. அதல்ை இன்னும் இறைவனுடைய ஆற்றல் முழுவதையும் அவர்கள் அறிந்ததில்லை.

வான நாடரும் அறியொ ணு தநீ.

வான காடருக்கே அறியும் ஆற்றல் இல்லையென்ருல் மற்றவர்களைப்பற்றி என்ன சொல்வது! மிகமிக உயரமாக இருக்கிறவனே ஒரு மரத்தின் கனியை எட்டிப் பறிக்க இயலவில்லை; அவனினும் குறைந்த உயரம் உள்ளவன் எப்படிப் பறிக்கப் போகிருன்?

தேவர்கள் கிடக்கட்டும். கடவுளைப் பற்றிய செய்தி களைப் பெரியவர்கள் நமக்குச் சொல்கிருர்கள். தம்முடைய அநுபவத்தால் உணர்ந்தவற்றைச் சொல்கிருர்கள். 'வேதத் தின் முடிவாகிய உபநிஷத் இப்படிச் சொல்கிறது” என்று அடிக்கடி மேற்கோள் காட்டுகிருர்கள். எந்தப் பெரியவர் இறைவனேப் பற்றிப் பேசிலுைம், அவருடைய அநுபவம் மற்றவர்களினின்றும் வேறுபட்டாலும், ஒரு விஷயத்தில் எல்லோரும் ஒன்ருகப் பேசுகிருர்கள்.

'உபநிஷத் இப்படிச் சொல்கிறது' என்றே ஒவ்வொரு வரும் பேசுகிருர்கள். அவர்கள் வெவ்வேறு வகையாகச் சொல்கிருர்களே; அவர்கள் யாவரும் மேற்கோளாகக் காட் டும் உபநிடதத்தையே அணுகிக் கேட்கலாம் என்று எண்ணி அதனே அணுகினலோ, அது ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறது. எப்படி இறைவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/69&oldid=535491" இலிருந்து மீள்விக்கப்பட்டது