பக்கம்:அன்பின் உருவம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அன்பின் உருவம்

"இப்போது அந்த மெய்யன்பரைப்போய் மறுபடியும் பார்த்துவிட்டு வா; அவர் என்ன சொல்கிறார்? கேட்டு வந்து சொல்" என்று முதியவர் இளைஞரை அனுப்பினர்.

மூலையில் தூணுக்கருகில் அன்பின் உருவமாக நின்றிருந்த அடியாரைக் குறுகினார் இளைஞர் "ஆண்டவனே! பல காலமாக நான் இப்படியே இருக்கிறேனே. நெகிழாமல் நிற்கிறேனே! உடையாய்! என்னைக் கண்டுகொள் அப்பா" என்று அவர் கூறியதை ஆராய்ச்சியிலே புகுந்த இளைஞர் கேட்டார். கேட்டதை முதியவரிடம் வந்து சொன்னர்.

"மூன்று கரணங்களையும் இறைவன் திறத்திலே ஈடுபடுத்தும் பயிற்சியில், இடையிடையே பொய்வர்து ஈர்க்கும்; அன்பு நெறியில் தளர்ச்சி உண்டாகும். அந்தத் தளர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் மேலும் மேலும் இறைவன்பால் ஈடுபடுவார்கள் மெய்யன்பர்கள். அவரிடத்தில் கண்ட மெய்ப்பாடுகளும் செயல்களும் உரைகளும், அவரிடம் உள்ள கனவுகளும் அன்பு மயமானவை. இந்த நிலை அவரிடம் சிறிதும் நெகிழவில்லை.”

"பின், என்னைக் கண்டுகொள் அப்பா என்கிறாரே; ஏன்?"

இறைவன் மீது அவருக்குள்ள பெருங்காதலை அது காட்டுகிறது. அன்பின் வேகத்தால் ஏங்கி நின்று அவர் பேசுகிறார், இறைவன் எத்தனையோ செயல்களைச் செய்கிறான் தன்னை அணுகி வேண்டுவார் வேண்டும் பொருளை அளவறிந்து வழங்குகிறான், ஐந்தொழிலை நடத்துகிறான். அவ்வளவு செயல்களில் ஈடுபட்டிருக்கும் அவனுக்கு இந்த நாயேனைக் காண நேரம் எது? மகா ஞானியரும் யோகியரும் அன்பர்களும் அவனுடைய அருளுக்காக ஏங்கி நிற்கும்போது இந்த எளியேன் அவன் கண்ணில் படுவேனா!' என்ற ஏக்க உணர்ச்சியால் அப்படிப் பேசு