பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

தி. அன்பொடு புணர்ந்த ஐந்தினை - மருதம்

200. நீ அவளிடமே போ கடல் கண்டன்ன கண்அகன் பரப்பின் நிலம்பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின் கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால், களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில், கழு நிவந்தன்ன கொழு முகை இடைஇடை முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க, பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து, வேப்பு நனை அன்ன நெடுங் கண் ஈர் ஞெண்டு இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல், திதலையின் வளிப்ப ஓடி, விரைந்து தன் நீர் மலி மண் அளைச் செறியும் ஊர! மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ, விழவு ஆடு மகளிரொடு தழுஉ அணிப் பொலிந்து, மலர் ஏர் உண் கண் மாண் இழை முன்கைக் குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல் புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து, நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய, என்ன கடத்தளோ, மற்றே? தன்முகத்து எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி, அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ் நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு, கூர் நுனை மழுகிய எயிற்றள் ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே.

- மருதம் பாடிய இளங்கடுங்கோ அக 176

கடலைக் கண்டாற் போன்ற நீர்ப்பரப்பு. அதில் நிலம்

பிளக்கும்படி இறங்கிய வேரில் முதிர்ந்த கிழங்கு. மூங்கிலைப் போன்ற துளையுடைய திரண்ட தண்டு, ஆண் யானையின் காதினைப் போன்ற இலைகள், அவற்றிடையே கழுமரம் உயர்ந்து தோன்றுவதைப் போன்ற செழித்த மொட்டுகள்.