பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று அந்தணர் தோயலர் ஆறு வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென ஐயர் வாய்பூசுறார் ஆறு விரைபு இரை விரை துறை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல் கரையொடு கடலிடை வரையொடு கடலிடை நிரைநிரை நீர் தரு நுரை se நுரையுடன் மதகுதொறு இழிதரு புனல் கரை புரளிய செலும்மறி கடல் புகும் அளவுஅளவு இயல் இசை சிறை தணிவின்று வெள்ள மிகை. வரை பல புரை உயர் களிறு அணி பயில் தொழில் மணி அணி யானைமிசை மைந்தரும் மடவாரும், நிரைநிரை குழிஇயினர் உடன் சென்று குரு மணி யானை இயல் தேர்ப் பொருநன் திருமருத முன்துறை முற்றம் குறுகித் தெரி மருதம் பாடுப பிணி கொள் யாழ்ப் பாணர் பாடிப் பாடிப் பாய்புனல்

ஆடி ஆடி அருளியவர், ஊடி ஊடி உணர்த்தப் புகன்று கூடி கூடி மகிழ்பு மகிழ்பு தேடித் தேடித் சிதைபு சிதைபு சூடிச் சூடிச் தொழுது,தொழுது மழுபொடு நின்ற மலி புனல் வையை விழு தகை நல்லாரும் மைந்தரும் ஆடி இமிழ்வது போன்றது இந் நீர்குணக்குச் சான்றீர் முழுவதும் மிச்சிலா உண்டு. சாந்தும் கமழ் தாரும் கோதையும் சுண்ணமும் கூந்தலும்பித்தையும் சோர்ந்தன பூவினும் அல்லால் சிறிதானும் நீர் நிறம் தான் தோன்றாது இவ் வையை ஆறு