பக்கம்:ஆனையும் பூனையும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஆனையொன்று வந்ததாம்
அசைந்தசைந்து நடந்ததாம்
பூனையொன்று பார்த்ததாம்
பதுங்கிக் கிட்டச் சென்றதாம்
ஆனை மேலே ஏறியே
அழகாய்ப் பவனி வந்திடப்
பூனை யாசை கொண்டதாம்
பதுங்கிப் பதுங்கிச் சென்றதாம்
ஆனை காதை ஆட்டியே
அங்குமிங்கும் பார்த்ததாம்
தூணைப் போலக் காலிலே
தொத்தியேற எண்ணியே
பூனை பதுங்கி யானையின்
வாலின் பக்கம் போனதாம்
ஆனை தும்பிக் கையினை
ஆட்டிச் சத்தம் செய்ததாம்
பூனை பயந்து நடுங்கியே
பாய்ந்து ஓடி மறைந்ததாம்
ஆனையொன்று வந்ததாம்
அசைந்தசைந்து சென்றதாம்.