பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை-வகை-உரை:த.கோவேந்தன்

என் இவ் இலக்கியப் பணியினை மற்றவரும் வழிகாட்டினால் செய்தல் கூடும். ஆனால், கல்லூரி, பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் தொன்னூற்கஞ்சி தடுமாறுளத்தராயினர். வருவாயோ புகழோ பெறமுடியாத பணியென மடியின் மடியில் மகிழ்பவராய் உள்ளனர். பட்டிமன்ற சொற்பொழிவுத் தொழில் வணிகப் பரத்தராக விளங்கும் இரு மனத்தராகவும், தன்மையே விற்கும் வேடிக்கை மாந்தராகவும் நாளுக்கொரு பேச்சும், வேளைக்கொரு பேச்சு என வலியுருக்கி நோயின் வாயில்களாக வாழ்கின்றனர். எனவே பாடுபட்டுழைக்கும் பண்பிலிகளாயினர்.

இந் நூலைத் தொகை-வகை-உரையுடன் கொண்டு வருவதில் ஓர் ஆர்வமும் அக்கறையும் உண்டு. இதற்கு முன் சங்க இலக்கியத்திற்கு என் உரைகள் வேறு வேறு மாந்தர்களின் பெயரால் வெளிவந்துள்ளன. பெயரிடப் படாமல் மற்றொரு நிறுவனம் அரைகுறையாய் வெளியிட்டது. இரண்டாண்டுகளுக்கு நான் புதுக்கிய உரைகள பணம் தந்தன. ஆனால் இருவர்-மூவர் பெயரில் மலிவு விலையைப் போலவே பிழைகளும் மலிந்து வெளிப்பட்டன. உழைப்புக்குக் கூலி கிடைத்தது. அதற்குரிய பேரும் புகழும் யார் யாரோ உரிமை கொண்டாடினர். அதற்காக நான் வருந்தவில்லை. ஏனெனில் சங்க இலக்கியம் பரவுவதில் எனக்குள்ள ஈடுபாடே காரணம்.

திரை உலகில் பின்னணிப் பாடகர் பெயர் போடப்பட்டாலும் வாய் அசைப்பவரான கதை மாந்தருக்கன்றோ பேரும் புகழும் பாடு பட்டுப் பயன் விளைவிக்கும் வேளாளரை எவர் நினைக்கின்றனர்? (தேவையும் இல்லை) ஆனால், சிற்றுண்டிப் பேருண்டிச் சாலைகளுக்குத் தானே பெயரும் புகழும். தாயையே மறக்கின்ற உலகத்தில் தந்தையை மறப்பது உலகத்தியற்கைதானே?

✽ ✽ ✽

அகப் பாடல்கள் அடி மிகமிக முதல் இக உரிப்பொருள்கள் விரிவடைகின்றன. அவையே போல் தமிழ் மன்னர்கள், அவர் தம் மற, அறச் செயல்கள் பிற மாந்தர் செயல்கள் தொழில்கள் வரலாறு நானல் வாழ்க்கை ஆகியவற்றின் குறிப்புகள் மிகுகின்றன.

ஆனால் கலித் தொகையிலோ, ஆரியரின் தொன்மச் செய்திகளும், பாண்டியனைப் பாடலிலுமில்லை குறிக்கப்படுகின்றன. ஆனால் எந்தப் பாண்டியன் என்று ஒரு பத்தியிலுமில்லை. மேலும் மருதத்திலும் வரும் பரத்தையர், ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகை,