சுந்தர சண்முகனார் 0 221
அறிவு - நற்றிணையில்:
'உறுதி தூக்கத் தூங்கி அறிவே
சிறிதுகனி விரையல் என்னும் ஆவிடை’ (284) கடல் (ஒதம்), கானல் (பொழில்), புள் (அன்னம்) : சிலப்பதிகாரம் - கானல் வரியில்:
"நேர்ந்த காதலர் நேமி நெடுங்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற ஒதமே பூந்தண் பொழிலே புணர்ந்தாடும் அன்னமே ஈர்ந்தண் துறையே இதுதகாது என்னீரே” மரம் - (மாந்தளிர்) - கலித்தொகையில்:
"மன்றப் பணைமேல் மலைமாந்தளிரே நீ
தொன்றிவ் வுலகத்துக் கேட்டும் அறிதியோ"
(142:47, 48) பொழுது (மாலை) - கலித்தொகையில்:
'மாலை நீ,
தையெனக் கோவலர் தனிக்குழல் இசைகேட்டுப் பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய்”
(108) நெஞ்சு - திருக்குறளில் பல அவற்றில் ஒன்று:
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவைஎன்னைத்
தின்னும் அவர்க்கான லுற்று' (1244) விலங்கு (மான்), மயில், குயில், பிடி - நைடதத்தில்: 'வாவும் இள மான்காள் மயில்காள் மடப்பிடிகாள்
கூவும் கரிய குயில்காள் மென் புள்ளினங்காள் ஆவி எனமேவி அகலேம் என அகன்ற காவலன்தான் போனவழி எனக்குக் காட்டீரோ”
(பிரிவுறு படலம் - 18)