பக்கம்:ஆண்டாள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

101


"சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதர்கின்றேன்" என்று குளிர்ந்து பேசும் காட்சியினையும் ஒருவர் திருப்பாவையிற் கண்டின்புற முடியும்.

இனி, ஆண்டாள் ஆழ்ந்த உறக்கத்தே ஆழ்ந்து அனந்தலாடிக் கொண்டிருக்கும் ஆயர் மகளிரை இடித் துரைத்து எழுப்பும் கருணைத்திறனும் காண்போம்.

1. புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய். - திருப்பாவை : 6

2. கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ?
பேய்ப்பெண்ணே -திருப்பாவை: 7

3. கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? -திருப்பாவை: 7

4. மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
-திருப்பாவை : 9

5. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ? வாசல்திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்பால்
போற்றப்பறைதரும் புண்ணியனால்பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்தகும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அளந்தல் உடையாய்? -திருப்பாவை: 10

6. சிற்றாதே பேசா தெ செல்வப் பெண்டாட்டிநீ
ஏற்றக்கு உறங்கும் பொருள்? -திருப்பாவை: 11

7. சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்செற்ற
மனத்துக் கினியானைப் படவும்நீ வாய்திறவாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/103&oldid=1462101" இலிருந்து மீள்விக்கப்பட்டது