பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 - சுந்தர சண்முகனார்

என் பிள்ளைகள் நால்வரும் நல்லவர்கள்- அறம் பிழையாதவர்கள்- அவர்கள் இருக்கும்போது எனக்கு, என்ன துன்பம் வரக்கூடும். நல்ல பிள்ளைகளைப் பெற்றவர்கள் இன்பமேயன்றித் துன்பம் எய்தார். இன்னும் குறிப்பாகச் சொல்கிறேன்: இராமனைப் பிள்ளையாகப் பெற்ற எனக்குத் துன்பமே இல்லை.

வெவ் விடம் அனையவள் விளம்ப வேற்கணாள் தெவ்வடு சிலைக்கை என் சிறுவர் செவ்வியர் அவ்வவர் துறைதொறும் அறம் திறம்பலர் எவ்விடர் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு எனா (54)

'பராவரும் புதல்வரைப் பயக்க யாவரும்
உராவரும் துயரைவிட்டு உறுதி காண்பரால் விராவரும் புவிக்கெலாம் வேதமே அன
இராமனைப் பயந்த எற்கு இடர்உண்டோ என்றாள்'

''' (55)

இந்தப் பாடல்களில் பொதுவாகப் பிள்ளைகள் நால்வரையும்- சிறப்பாக இராமனையும் பெரிதும் புகழ்ந்து பாராட்டும் கைகேயி, பின்னால், இராமனது முடியைப் பறித்துக் காட்டுக்கு அனுப்பப் போகிறாள். நிலைமை இதுவாயிருக்க, இதற்கு எதிர்மாறாக இப் பாடல்கள் அமைந்து சுவை பயப்பதை என்னென்று சொல்வது!

பரதன் தவம்

கூனி கைகேயிக்கு மேலும் கூறுகின்றாள்: இராமன் இலக்குவனை உடன் வைத்துக் கொண்டு இந் நாட்டை ஆள்வானாயின், உன் மகன் பரதன் சத்துருக்கனனுடன் காட்டிற்குச் சென்று தவம் செய்ய ஏற்பாடு செய்தல் நன்று- என்கிறாள்.

'சரதம் இப்புவி எலாம் தம்பியோடும் இவ்

வரதனே காக்குமேல் வரம்பில் காலமும்
பரதனும் இளவலும் பதியின் நீங்கிப் போய்
விரதமா தவம்செய விடுதல் நன்று என்றாள்'

(65)