பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

219


செயலில் ஈடுபட்டு எமக்குச் சில குறை கூறாதே!” என்று சொல்லி ஊடல் நீங்கினாள் தலைவி.

248. வேண்டாத செயல்

அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம் புரி நெகிழ் முல்லை, நறவொடு அமைந்த தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார் பொரு முரண் சீறச் சிதைந்து நெருநையின் இன்று நன்று, என்னை அணி. அணை மென் தோளாய்! செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்குஎவன், ஐயத்தால் என்னைக் கதியாதி, தீது இன்மை தெய்வத்தான் கண்டி தெளிக்கு. மற்றது, அறிவல், யான் நின் சூள் அனைத்தாக நல்லார் செறி தொடி உற்ற வடுவும் குறி பொய்த்தார் கூர் உகிர் சாடிய மார்பும், குழைந்த நின் தாரும், ததர் பட்ட சாந்தமும், சேரி அரி மதர் உண் கண்ணார் ஆராக் கவவின், பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு, யானும் செரு ஒழிந்தேன்; சென்றி, இனி. தெரியிழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய், நீ - தீது இன்மை ஆற்றின் நிறுப்பல் பணிந்து. அன்னதேல், ஆற்றல் காண்: வேறுபட்டாங்கே கலுழ்தி, அகப்படின். மாறுபட்டாங்கே மயங்குதி; யாது ஒன்றும் கூறி உணர்த்தலும் வேண்டாது; மற்று நீ மாணா செயினும் மறுத்து, ஆங்கே நின்வயின் காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின், என் உற்றாய் பேனாய் நீ பெட்பச் செயல். - கவி 91 நறவம் பூவுடன் அழகிய நீரில் மலர்ந்த நீலப்பூ அனிச்சம்

பூ, முறுக்கு நெகிழ்ந்த முல்லைப் பூ ஆகியவை பொருந்திய