அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 69
உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கட்குத் தெரியாமல் தேரை ஓட்டினானாம். அதாவது, அவர்கள் விழித்துப் பார்க்கின், தேர் ஒடிய பாதையைப் பார்த்து, இராமன் நகருக்குத் திரும்பி விட்டான் என்று மக்கள் நம்பும்படித் தேரைத் திறமையுடன் ஒட்டினானாம். இராமன் மேற் கொண்டு காடு நோக்கிச் சென்று விட்டதால், இராமனையும் தேரையும் காணாத மக்கள், இராமன் நகர் திரும்பி விட்டான் என நம்பினர். இதற்குக் காரணம், சுமந்திரன் சுற்றிருந்த தேர் ஒட்டும் கல்வி மாட்சியே யாகும். பாடல்:
கூட்டினன் தேர்ப்பொறி கூட்டிக் கோள்முறை பூட்டினன் புரவி, அப்புரவி போம்நெறி
காட்டினன்; காட்டித் தன் கல்வி மாட்சியால் ஓட்டினன் ஒருவரும் உணர்வுறாமலே
(46)
இப்பாடலில் உள்ள கல்வி மாட்சியால்' என்பது எண்ணத் தக்கது.
அரவும் அன்றிலும்
அகவை முதிர்ந்த பாம்பின் உடலில் மாணிக்கம் உண்டாகும் என்றும், ஆண் அன்றில் பறவையும் பெண் அன்றிலும் எப்போதும் இணைபிரியா என்றும் சொல்லுவர். கணவன் தயரதனை இழந்த கோசலை, மணி பிரிந்த பாம்பு போலவும், துணை பிரிந்த அன்றில் பேடை போலவும் துயருற்றுப் புலம்பினாளாம். பாடல் பகுதி:- -
மருந்து இழந்தவரின் விம்மி மணி பிரி அரவின் மாழ்கி
அருந்துணை இழந்த அன்றில் பெடை என அரற்ற லுற்றாள்
(15)