பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

39

கலாம். ஆனால் அந்தக் காலத்து மனுஷர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம்...அவா எதிர்பாக்கறதிலே ஒருதப்பும் இல்லை.”

மணி இரண்டுக்கு மேல் இருக்கலாம். பட்டப்பாவும் நர்மதாவும் படுத்து விட்டார்கள்.

பாலு பூரணியை நச்சரித்தான்.

“சே... சே... மசக்கையிலே சோறு தண்ணி இல்லாம அவஸ்தப்படறேன். இப்ப என்ன வேண்டிக்கிடக்கு” என்று விட்டு அவள் தள்ளிப்போனாள்.

பொழுதும் விடிந்தது.