பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 அப்பரும்-அப்பாவும் வெளில பேசுறது கூடத் தப்புன்னால் அது அந்த அநியாயத்துக்கு உடன்போவதாய் ஆகாதா? அதோ அப்பா நாமார்க்கும் குடியல்லோ முன்னு ரொம்பத்தான் கத்துறார். அவருக்கு அதோட அர்த்தம் தெரியாது. தமிழாசிரியையான ஒங்களுக்காவது தெரியுமா! நாமார்க்கும் குடியல்லோமுன்னு. ஒதி. அப்பர் பாடுவதைக் கொச்சப் படுத்தாண்டாமுன்னு அப்பாகிட்டே போய்ச் சொல்லு. அர்த்தம் தெரியாமல் எந்தப் புனித வரியையும் வாசிக்கிறது அந்தப் புனிதத்தையே அவமதிக்கிறது மாதிரி. கையைத் தானே பிடித்தான்னு, அதுக்குப் பின்னால இருக்கிற ஆணவத்தை, அகந்தையைத் தெரியாமல் இருக்கீங்களே, அதேமாதிரிதான்!" இசக்கியா பிள்ளையின் கண்ணிர் நாமார்க்கும் குடியல்லாம் வாசகங்களை நனைத்தது. அந்தப் பாடலை, அப்பர் பிரான் பாடிய சூழலை எண்ணிப் பார்த்தார். அப்பரே அங்கு வந்து..... அவரையே ஒரு எதிர் பக்தியாளனாய், தன்னைக் கடலில் கல் கட்டித் தூக்கிப்போட்ட அந்த மன்னனின் மறுவுருவமாய்ப் பார்ப்பதுபோல் தோன்றியது. இந்தப் பாடலின் மெய்யான தாத்பரியம், அவர் இதுவரை யந்திரகதியில் ஒதிவரும் மந்திரங்களுக்குப் புதிய அர்த்தத்தைக் கொடுத்தன. புத்திர்பலம், யசோர் தைரியம், நிர்ப்பயத்துவம். ஆம், பயம்தான். பயப்படவேண்டும். கொத்துதிரி. சூலி திரி குலச ஓங்காரி. ஆங்காரி. ரீங்காரி போன்ற சொற்கள், புதுப்பொருளைக் கற்பிக்க, சூலாயுதம் மட்டுமல்ல, நாமார்க்கும் என்பது ஒதுவதற்கும், உச்சரிப்பதற்கும் ம்ட்டும் அப்பர் பெருமான் ஆக்கவில்லை. இசக்கியா பிள்ளை, மகளையே ஒரு துர்க்கையாக அனுமானித்தார். தன்னுள்ளே, ஒரு கடல் பொங்குவதைக் கண்டார். அதிலே திரிசூலமும், உடுக்கும் எழுவதைப்