பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 139 இதுவோ என்பவைகளுக்கெல்லாம் மூலமாகவும், அப்பாற்பட்டும் தோற்றம் காட்டும் அந்த ஜோதி, ஆன்மாக்களுடைய அன்னையர் உருவங்களாகக் காட்சியளித்துக் கொண்டே இருந்தது. அந்த ஆன்மாக்கள் கண்கொள்ளும் வரை காட்சி காட்டியது. பின்னர் - ஒவ்வொரு ஆன்மாவிற்கும், ஒவ்வொரு தாயாக காட்சி அளித்த அதே தாய், மீண்டும் பேரண்டப் பேரொளி பிரளய சக்தியானது. ஆன்மாக்களுக்கு, அநேகமாக புரிந்திருக்கலாம், ஆனந்த விகடன், 7-3-1976