பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

169


கைம்மண் அளவு கல்லாதது உலகளவு', 'கல்வி கரையில கற்பவர் நாள்சில' -- ஆதலின், சாந்துணையும் கற்கச் சொல்கிறார்.

இப்பொழுது இக்குறட் கருத்தில் ஒரு புரட்சிப் புயல் வீசப்போகிறது:-- எந்த நாட்டாரும் எந்த ஊராரும் படிக்கலாம், இங்கே வசதியில்லை என்று ஏய்க்காதே - எந்த நாட்டுக்கும் எந்த ஊருக்கும் சென்று படிக்கலாம். உடல் நலம் இல்லை -- பணவசதியில்லை என்று ஏய்க்காதே - படிப்பினால் செத்தாலுஞ் சரி -- சாகும்வரை படி, படிப்பவனுக்கு எந்த நாட்டிலும் எந்த ஊரிலும் இடங்கொடுத்து மதித்து, சாகும் வரையுங் கூட ஆதரிக்கவேண்டும்'.- இது தான் சிந்தனையைச் சுழற்றும் அந்தப் புரட்சி புயல்!

அறத்துப்பால்
இல்லறவியல் - வாழ்க்கைத் துணை நலம்
இல்லதென்? உள்ளதென்?

(தெளிவுரை) மனைவிக்கு மாண்பு இருந்தால், குடும்பத்தில் இல்லாதது என்ன? எல்லாம் இருக்கும். மனைவிக்கு மாண்பு இல்லையானால், குடும்பத்தில் உள்ளது என்ன? ஒன்றும் இருக்காது.

"இல்லதெ னில்லவண் மாண்பாளா லுள்ளதெ
எல்லவள் மாணாக் கடை"

(இல்லது என் இல்லவள் மாண்பானால்; உள்ளது என் இல்லவள் மாணாக்கடை).

(பதவுரை) இல்லவள் மாண்பானால் = மனைவி மாட்சிமையுடன் விளங்கினால், இல்லது என் வீட்டில் இல்லாத