ஆணிமுத்துகள்
157
மாட்சித்தாயினும் 'இல்' என்று ஒரே அடியாய் அடித்து, விட்டார். எனவே, மனைக்கு வாய்த்துள்ள மங்கையர்களே! என்ன செய்ய இருக்கின்றீர்கள்?
(தெளிவுரை) தொடர்பில்லாத அயலாரைப் போலப் பொதுவாகப் பார்க்கும் போக்கு, புதிதாகக் காதல் கொள்வோரிடம் உண்டு.
- "ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
- காதலார் கண்ணே யுள"
(பதவுரை) ஏதிலார் போல - (முன்பின் தொடர்பி லாத) அயலாரைப்போல, பொது நோக்கு நோக்குதல் = பொதுவான பார்வையுடன் ஒருவரையொருவர் பார்ப்பது, காதலார் கண்ணே உள - (புதிதாகக்) காதல் கொள்பவரிடம் உண்டு. (ஏதிலார் - அயலார்).
(மணக்குடவர் உரை) அயலார் போலப் பொதுநோக்கத் தால் நோக்குதல் காதலித்தார் மாட்டே யுளதாம்.
(பரிமேலழகர் உரை) முன்னறியாதார் போல ஒருவரை யொருவர் பொதுநோக்கத்தா னோக்குதல், இக் காதலை யுடையார் கண்ணே யுளவாகா நின்றன -- (தோழி சொல்லியது)
(விளக்கவுரை) நாம் வெளியே தெருவே போய்க் கொண்டிருக்கும்போது பலரைப் பார்க்கிறோம்; அறிமுக