பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

ஆழ்கடலில்



யெல்லாம் உண்மையான உதவியாகா. இது குறித்தே, ‘பழியஞ்சிப் பாத்துரண்’ என்றார் ஆசிரியர்.

பண்பும் பயனும்

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”

(பதவுரை) இல்வாழ்க்கை = (ஒருவனுடைய) இல்லற வாழ்க்கையானது, அன்பும்=(யாவரிடத்தும்) அன்பினையும், அறமும் = அறச் செயலினையும், உடைத்தாயின் = உடையதாய் இருக்குமேயானால், பண்பும் = (அவ்வில்வாழ்க்கையின்) இலக்கணமும், பயனும் = நன்மையும், அது = அந்த அன்பும் அறமும் உடைத்தா யிருக்கின்ற அச்செயலே.

(தெளிவுரை) பண்பு என்றால் இலக்கணம்; அஃதாவது தன்மை. இல்வாழ்க்கைக்கு இருக்கவேண்டிய இலக்கணம் அன்பும் அறமும் உடைமையே - இல்வாழ்க்கையின் பயனும் அந்த அன்பும் அறமும் உடையதாய் இருப்பதே. அன்பும், அறமும் இல்லாதவன் இனிமையாக இல்வாழ்க்கையை எப்படி நடத்தமுடியும்? முடியாது. அதனாலேயே அவ்விரண்டும் உடைமை இல்வாழ்க்கையின் இலக்கணம் என்றார். யாவரிடத்தும் அன்பு காட்டுவதும், அறம் செய்வதுமே இல்வாழ்க்கையின் நோக்கம் ஆதலால், அவ்விரண்டும் உடைமை இல்வாழ்க்கையின் பயனும் ஆகும் என்றார்.

இஃதென்ன! ஒன்றையே இலக்கணமாகவும், பயனாகவும் கூறித் தியங்கச் செய்துள்ளாரே திருவள்ளுவர் என்று திகைக்கலாம் சிலர். இத்தியக்கத்தாலேயே பரிமேலழகர் வேறு விதமாக உரை பகர்வாராயினார். கூர்ந்து நோக்கின், இங்குத் திகைப்பிற்கே இடம் இல்லை. எடுத்துக்காட்டு ஒன்று வருக: