பக்கம்:அகமும் புறமும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214 • அகமும் புறமும்

பலர்ப்பெறல் நசைஇநம் இல்வா ரலனே!
மாயோன், நலத்தை நம்பி விடல்ஒல் லாளே!
அன்னியும் பெரியன் அவனும் விழுமிய
இருபெரு வேந்தர் பொருகளத்து ஒழித்த
புன்னை விழுமம் போல
என்னோடு கழியும் இவ் விருவரது இகலே.
                                                                   (நற்றிணை-180)

(பழனம்—வயல், பாகல்—பலா மரம், முயிறு—சிவப்பு நிறமுடைய சுளுக்கி எறும்பு, மூசு—நெருங்கு; குடம்பை—கூடு; உரைத்தலின்—உறிஞ்சுதலால்; தாஅம்—பரந்து கிடக்கும்; நசைஇ—விரும்பி; நலம்—பெருந்தன்மை; அன்னி—ஒரு சிற்றரசன்; பெரியன்—திதியன் என்பான்)</poem>

‘புன்னைமரம் வெட்டுண்ட பிறகே திதியனும் அன்னியும் பகைமை ஒழிந்ததுபோல, யான் ஒழிந்த பிறகே இவர்கள் பூசல் திரும் போலும்!’ என்று நொந்துகொள்கிறாள் தோழி.