146
ஆழ்கடலில்
என்பது புலனாம். உண்மையில் அவ்வாறு செய்யவேண்டும் என்பதா அவளது நோக்கம்? இல்லை. அவளது பார்வையிலே உள்ள கவர்ச்சி இயற்கையாய் அவனது காம நோயைத் தூண்டுகிறது; அவளது பார்வையிலே உள்ள காதல் குறிப்பு அவனுக்கு அமிழ்த மருந்தாகி ஆறுதல் அளிக்கிறது. அவ்வளவுதான்! நாடகத்திலே கூத்தடிக்கிறார்களே, அவ்வாறா நம் வள்ளுவர் படைப்பாகிய தலைமகள் நடந்து கொள்வாள்? இல்லை; அவள் நாணமுடையவளாதலின், கண் வீச்சிலே காதலைச் சொரிகிறாள். அந்தக் குறிப்பை அறிந்து கொள்கிறான் அவன். அதுதான் 'குறிப்பறிதல்' எனப்படுவது. முன்குறித்த 'குண நாற்பது' பாடலின் கருத்து. இந்தக் குறள் கொடுத்த கொடையாக இருக்குமோ!.
(தெளிவுரை) கற்றவர்களே கண்ணுடையவர் ஆவார்கள்; கல்லாதார் முகத்தில் இருப்பவை கண்கள் அல்ல - இரண்டு புண்களே!
- "கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
- புண்ணுடையர் கல்லா தவர்"
(பதவுரை) கண்ணுடையர் என்பவர் கற்றோர் = உண்மையில் கண் உடையவர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுதற்கு உரியவர்கள் கற்றவர்களே யாவார்கள், கல்லாதவர் = கற்காதவர்களோ, முகத்து இரண்டு புண்ணுடையர் - முகத்திலே கண்கள் அல்ல- இரண்டு புண்கள் உடையவர்களாகவே கருதப்படுவார்கள்,