17
திருமந்திரம்-பொருள்நிலை * 13
திருமந்திரம்-பொருள்நிலை 17
அதனால்தான் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று கூறினர். திருமூலர்,
“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன்று ஈயின் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே”
(திருமந்திரம்-1857)
என்றும்,
“அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்’ -
(திருமந்திரம்-270)
என்று கூறுமுகமாக இதனை வலியுறுத்திப் போனார்.
உலகியலிற்கூட ஒரு தாய்க்கு ஒரு பொருளைத் தருதலினும் அவளுடைய குழந்தைகட்கு அதனைத் தருவது மூலம் அத்தாயின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க முடியும். அதுபோல உயிர்கட்குச் செய்யும் உதவி கண்டு யாவர்க்குந் தாயாகிய இறைவனும் மகிழ்கிறான். குழந்தை மகிழக் கூடிய, சிறிய பொருளைத் தரினும் அக்குழந்தையின் மகிழ்ச்சி கண்டு தாய் தானும் மகிழ்கிறாள். ஆனால் அதே பொருளை நேரடியாகத் தாய்க்குத் தரின் அவள் அச்சிறிய பொருளை ஏற்று அவ்வளவு மகிழ்ச்சி அடைவாளா என்பது ஐயத்திற்குரியது. இறைவனுக்குத் தொண்டு செய்வதினால் உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் அர்ப்பணித்து தொண்டுசெய்யவேண்டும். அது அத்துணை எளியதுமன்று. ஆனால் உயிர்கட்குத் தொண்டு செய்ய இத்துணைப் பாடுபட வேண்டா, என்றாலும் இறைவன் உயிர்கட்குத் தாய் ஆதலின், அவர்கட்குத் தொண்டு செய்வதைக் கண்டு மகிழ்கின்றார். இந்த நுணுக்கத்தை