பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


செழித்தெழும் பயிர்க்கு லத்தைச்
சிதைத்திடும் பூச்சி யைப்போல்
செழிந்திருநி துயர்வு கொண்ட
திராவிடர் நாட்டில் மேளுள்
கழிசடை ஆரி யர்கள்
கலந்தபாம் தீமை எண்ணி
அமுதனை போலும்; வேண்டாம்
ஆரியம் அழுத லைப்பார்.

முப்பாலைத் தொட்டி லாக்கி
முத்தமிழ் மஞ்சம் வேய்ந்திங்
கெப்பாங்கும் புறஅ கத்தின்
எழில்மணிக் கவி இழைத்துக்
கப்புகழ் பத்துப் பாட்டின்
காட்சியைத் தொங்க விட்டேன்
அற்புதக் கலித்தொ கைப்பால்
அளித்தேன்நான் அழாதே டாநீ!

16