பக்கம்:அருளாளர்கள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232 * அருளாளர்கள்



காமத்தானைத் தரிசித்துவிட்டோம் என்ற எண்ணம் மனத்தில் நிறைந்து விட்டது” என்றார். இரண்டு நாட்கள் கழித்து கொழும்பிற்குச் சென்றேன். அங்கு ஐந்து நாட்கள் பேச ஏற்றுக் கொண்டிருந்தேன். முதல்நாள் போய் இறங்கியவுடன் வழக்கம்போல் சேர். கந்தையா வைத்தியநாதன் உட்பட பலர் விமானநிலையம் வந்திருந்தனர். அன்றுமதியம் செய்தி விளம்பரத்துறைச் செயலாளர் வீட்டில் மதிய உணவிற்கு ஏற்பாடாகி இருந்தது. சாப்பிடுவதற்கு முன் ஆடிவேல் விழாவை சினிமா எடுத்திருக்கிறோம் பார்க்கிறீர்களா என்று கேட்டார். நான் சரியென்றவுடன் ஜன்னல்களை எல்லாம் மூடிவிட்டு 14, m m புரஜெக்டர் (projector) கருவி வைத்து மூன்று நாட்கள் முன்னர் நடந்த ஆடிவேல் விழாவில் எடுத்த படத்தைப் போட்டார்கள். சில நிமிடங்கள் கழிந்த உடன் என்மூச்சே நின்றுவிடும் போல் ஆகிவிட்டது. காரணம் யாழ்ப்பாணத்தில் சிறீகாந்தா உட்பட எங்கள் மூவரிடமும் ஒருமணிநேரம் காட்சி தந்த யோகசுவாமிகள் அதே நேரத்தில் கதிர்காமத்தில் ஒலிவாங்கியின் முன்னர் பேசுவதை அந்தச் சினிமாப் படம் காட்டிற்று.

அதிர்ந்துபோன நான் செயலாள நண்பரைப் பார்த்து “இது என்ன பழையபடம், இதைப் போட்டுக் காட்டினர்களே” என்றேன். அதை மறுத்த அவர் முந்தா நாள் எடுத்ததுதான் இது என்பதற்கு அத்தாட்சியாக அந்தப் படச்சுருளை வைக்கும் தகர டப்பாவின்மேல் எழுதியிருந்ததைக் காட்டினார். எப்பொழுது எடுக்கப்பட்டது எந்த மணியிலிருந்து எதுவரை என்றெல்லாம் அதில் எழுதியிருந்தது.

பொறுமை இழந்த நான் உடனே தொலைபேசி மூலம் யாழ்ப்பாணத்திலுள்ள சிறீகாந்தாவுடன் தொடர்பு கொண்டேன். நான் எவ்வளவு எடுத்துக் கூறியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/243&oldid=1292322" இலிருந்து மீள்விக்கப்பட்டது