பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலூர்ப் புரட்சி

15



அஞ்சத்தக்க போர்க் கருவிகள் கோட்டைக்குள் போய்ச் சேர்ந்தன. வழி மறித்துக், கேட்ட வாயிற் காவலர்கட்குப் பல்லக்குகளில் திப்புக் குடும்பத்தின் அந்தப்புரத்துப் பாவையர்கள் இருப்பதாகச் சொல்லிக் காரியம் எளிதில் சாதிக்கப்பட்டது. இச்செய்திகளெல்லாம் பல்வேறு வழிகளில் வெள்ளைத் துரைமார்கள் செவிகளிலும் சிறிது சிறிதாகச் சென்று சேர்ந்தன. ஆயினும், அவர்கள் கவலையற்றவர்களாய்க் குடித்துக் கூத்தாடிக் கும்மாளமிட்ட வண்ணம் இருந்தார்கள்,

திப்புவின் மகள் திருமணம் : இந்நிலையை உணர்ந்த தமிழ் வீரர்கள் புரட்சி வேலைகளைத் துணிச்சலோடு விரைந்து கடத்தி வெள்ளையரை வீழ்த்தி வேலூர்க் கோட்டையைத் தங்கள் உடைமையாக்கும் நல்ல நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். அந்நிலையில் திப்புவின் மகளொருத்திக்கு 1806-ஆம் ஆண்டு, ஜூலைத் திங்கள், 9-ஆம் நாள் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு ஆயிரக்கணக்கான 'அன்பர் ’ விருந்தினராய் வந்து குழுமினர். மக்கள் உள்ளத்தில் புரட்சித்தீ மூளுவதற்கான சூழ்நிலை மிக நன்றாக உருவாகியது. அதன் பயனக மறு நாள், ஜூலை மாதம், 10-ஆம் தேதி, வியாழக்கிழமை, அதிகாலையில் பயங்கர வெடி முழக்கங்கள் விண்ணையும் மண்ணையும் அதிரச்செய்தன. ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முதல் முதலாக இந்திய மண்ணில் இராணுவப் புரட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/17&oldid=1137684" இலிருந்து மீள்விக்கப்பட்டது