பக்கம்:அங்கும் இங்கும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

அம்மாளிகை.......நெம்பர் தொழிற்சாலைத் தொழிலாளர்களுடைய நலவிடுதி”

“இதோ கடலை யொட்டியுள்ள கடலகம், முன்பு ஒரு கோடீசுவரனுடைய மாளிகை.இன்று ஆசிரியர்கள் நலவிடுதி,” இப்படிப் பல பெரிய கட்டிடங்களை சுட்டிக் காட்டினார். எங்களைச் சிம்பராபல் விமான நிலையத்திலிருந்து அழைத்துக் கொண்டு போனவர் ஒவ்வொரு சாராருக்கும் ‘நலவிடுதி’ என்று குறிப்பிட்டு வந்தார்.

“ நலவிடுதி என்றால் என்ன?” எனும் ஐயத்தைக் கிளப்பினோம்

“உடல் நலத்திற்கேற்ற தட்ட வெப்பநிலையும், நற்காற்றும், இயற்கைச் சூழ்நிலையும் உடைய பல மலையூர்களையும் கடற்கரைப் பட்டினங்களையும் ஆரோக்கிய ஆஸ்ரமங்களாகக் காத்து வருகிறார்கள். பலதுறைகளிலும் பாடுபடும் பாட்டானிகளும், அலுவலர்களும் ஊழியர்களும் ஆண்டுக்கு ஒருமுறை விடுமுறையில் அத்தகைய இடங்களுக்குச் சென்று தங்கி ஒய்வு பெறுவார்கள். உடல் நலத்தோடும் உள்ள ஊக்கத்தோடும் வேலைக்குத் திரும்புவார்கள். இதற்கு வசதியாக இருக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆரோக்கியபுரியிலும் வெவ்வேறு பிரிவுத் தொழிலாளருக்கென்றும் தனித்தனி விடுதி உண்டு.

“எடுத்துக்காட்டாக இரயில்வே தொழிலாளிகளுக்கென்று அவர்கள் தொழிற்சங்கத்தின் பராமரிப்பில் விடுதி அமைத்திருப்பார்கள். அதேபோல மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் விடுதி அமைத்திருப்பார்கள். ஆலை தொழிலாளர்களுக்கென்று ஒரு விடுதி இருக்கும் ஆசிரியர்களுக்கென்று, அவர்கள் சங்கம் ஒரு விடுதியை நடத்தும்.