பக்கம்:அங்கும் இங்கும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

யிடம் தமிழில் பேசினேன். சிரிப்பை வலிய வரவழைத்துக் கொண்டு பேசினேன்.

“இது உன்னால் வந்த வம்பு, ‘நோட்’ வாங்க நிறையப் பணம் வேண்டுமே என்றதால் நமக்குப் பிச்சை கொடுக்க வந்திருக்கிறது, இப்பெண். நீ சும்மா இரு. நான் சமாளித்துக் கொள்கிறேன்,” இப்படிச் சொல்லிவிட்டு அந்த மாணவியோடு பேசினேன்.

“பலகையில் எழுதுவதா ; நோட்டில் எழுதுவதா ? என்பது பணத்தை மட்டும் பொருத்தது அல்ல, பழக்கத்தையும் சேர்ந்தது. எங்கள் நாட்டுப் பழக்கம், சில ஆண்டுகள் பலகையில் எழுதிய பிறகே, காகிதத்தில் எழுதுவது. இப் பழக்கத்தை மாற்ற எங்கள் நாட்டில், ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதுனால் பேப்பர் வேண்டா. உன் நல்லெண்ணத்தித்து நன்றி என்று சமாளிக்க முயன்றேன்.

அக் குழந்தை என் பேச்சை நம்பினதாகத் தெரியவில்லை.

நான் நிறைய ‘பேப்பர்’ கொடுந்தனுப்புகிறேன், கொண்டு போய்க் கொடுங்கள்” என்று கெஞ்சிற்று. என்ன சொல் வதென்று தெரியாமல் இரண்டொரு வினாடி திகைத்தேன். இதற்கிடையில் மற்றொரு மாணவி என் உதவிக்கு வந்தாள்.

‘எலிசபெத், நீ மாலை வீடு திரும்பும்போது, என் வீட்டிற்குள் வந்து போ, என் தாத்தா வைத்திருந்து, எழுதிய பலகை எங்கள் விட்டில் பத்திரமாக இருக்கிறது. அதை உனக்குக் காட்டுகிறேன். நம் நாட்டிலும் முற்காலத்தில் பலகையில்தான் எழுதுவார்கள்’ என்றாள் அம்மாணவி. இன்னும் இரண்டொரு மாணவிகளும் தங்கள் வீட்டில் அத்தகைய பலகைகள் காட்சியில் இருப்பதாகக் கூறினார்கள். அதற்கப்புறமே விட்டாள், நன்கொடை கொடுக்க முனைந்த மாணவி.