பக்கம்:அங்கும் இங்கும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99


உயர் தொடக்கக் கல்வி ; உயர்நிலைக் கல்வி, கல்லுரரிக் கல்வி ஆகிய பொதுக் கல்வி தவிர, ஏறத்தாழ முந்நூற்று இருபது, ‘தனிக் கல்வி’ வகைகள் சோவியத் நாட்டில் இருக்கின்றன.

இக்கல்லி வகைகளைப் பெறுவோர் அனைவரும் படிப்பைத் தவிர வேறு வேலை செய்யாத முழு நேர மாணவ மாணவியரா ? இல்லை.

முழு நேர மாணவரை விட, அலுவலிலோ தொழிலிலோ இருந்துகொண்டே, பகுதி நேரக் கல்விக்கூடத்திலோ, அஞ்சல் கல்விக்கூடத்திலோ சேர்த்து படிப்போரே அதிகம் பேர்.

பகுதி நேரக் கல்வி முறையும் அஞ்சல் கல்வி முறையும் மிகப் பரவலாக இருப்பதனால் மட்டுமே, இத்தனை ஏராள மானவர்களுக்கு, மூன்றில் ஒருவருக்கு ‘ஏழு கோடியே எழுபது இலட்சம் மக்களுக்கு, கல்வி வசதி செய்து கொடுக்கும் சுமையைத் தாங்க முடிகிறது. முதியோர் கல்வி பளிச்சென்று வளர்வதற்கு இரண்டாம் அடையாளம் ‘தனிக்கல்வி’ ஈடுபாடு ஆகும்.

பகுதி நேரக் கல்வியும், அஞ்சல் முறைக் கல்வியும் குறிப்பிட்ட நோக்கத்தைக் கொண்டவை-பயிற்சி அளிப்பதையோ, சான்றிதழ் வழங்குவதையோ, நோக்கமாகக் கொண்டவை. பகுதி நேரக் கல்வியும், அஞ்சல் முறைக் கல்வியும்-அமைப்பு முறைக் கல்வி குறிப்பிட்ட பயிற்சியையோ, சான்று இதழையோ நினைவில் கொண் டது. அமைப்பு முறைகளுக்கு அப்பால், தன்னிச்சையாக நடக்கும் கல்வி ஒன்றுண்டு. அது எது ?

அது நூல் படிப்பு. தாமே விரும்பி நூலை விலை போட்டு வாங்கிப் படிப்பதும், நூலகத்திலிருந்து நூலைக் கடன் வாங்கிப் படிப்பதும் அமைப்பில் அடங்காக் கல்வி. இத்தகைய கல்வியும் பெருமளவில் நடக்கிறது.