பக்கம்:அங்கும் இங்கும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17. ஈர உள்ளம்

யிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தோராம் ஆண்டு, ஒரு நாள் காலை, நானும் என் மனைவியும் தொடக்க நிலைப் பள்ளியொன்றைப் பார்த்தோம் ; நம் நாட்டில் அல்ல. பிரிட்டனில். அப் பள்ளியில் படித்தோர் சாதாரண குடும்பத் தினர். தலைமை ஆசிரியை எங்களைப் பல பகுதிகளுக்கும் அழைத்துக்கொண்டு போனார். மூன்றாம் வகுப்பில், கூட்டம் முடியும் வரை அங்கேயே இருந்தோம். நடவடிக்கைகளைக் கவனித்தோம் என்ன கூட்டம் தெரியுமா ? இளைஞர் செஞ்சிலுவைச் சங்கக் கூட்டம் அது, கூட்ட நடவடிக்கைகளில் புதுமை ஒன்றுமில்லை. நம் நாட்டில், நல்ல பள்ளிகளில் நடக்கும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கக் கூட்டம் போலவே இருந்தது : வழக்கமான நிகழ்ச்சிகளுக்குப் பின் மாணவிகள் சார்பில் வேண்டுகோள் வந்தது. யாருக்கு வேண்டுகோள் ? என்ன வேண்டுகோள் ?

எங்களுக்கு வேண்டுகோள். இந்தியாவைப் பற்றிப் பேச வேண்டுமென்று வேண்டுகோள். அதை நாங்கள் எதிர் பார்க்கவில்லை. ‘நாடுகளுக்கிடையே நல்லெண்ணத்தை’ வளர்ப்பதும், இளைஞச் செஞ்சிலுவைச் சங்கத்தின் குறிக் கோள்களில் ஒன்று. எனவே, வேண்டுகோள் பொருத்தமானதே.

அ. இ.-7