பக்கம்:அண்ணா நாற்பது.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இத்தனைநற் கடமைகளும் யார்செய்வர் நீயின்றி எங்கள் அண்ணா
அத்தனையும் முடிவுபெற அருவுருவாய் அருள்புரிவாய் அருமை அண்ணா!


38 புற்றுநோய் பின்னே புல்லன் காலன் மெல்ல
ஒற்றிச் சென்றே உயிரை உறிஞ்சி விட்டான்
புற்றுநோய் தனையும் பொல்லாக் காலன் தனையும்
முற்றும் விரட்ட முடியா மூட ரானோம்.


39 நாடுபல சென்றிட்டு நற்றமிழின் பெருமைதனை நாட்டி வந்தாய்
பீடுபெறு பாரதநற் பெருநாடு முழுவதுமே பெருமை பெற்றாய்
நாடுகண்டு பூரிக்க நல்லமுத லமைச்சேற்று நன்மை செய்தாய்
வீடுவிட்டுக் கூடுவிட்டு வீரத்தமிழ் உள்ளங்களாம் வீடு புக்காய்.


40 அண்ணாவிட் டகன்றதனால் அரற்றுதலே வேண்டாவாம்
அண்ணாவாய் நடைமுறையில் அனைவருமே மாறிவிடின்
அண்ணாக்கள் பலகோடி ஆகிடுவர் தமிழகத்தில்
அண்ணாவின் புகழுடனே அவர் கொள்கை வாழ்ந்திடுமே!


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_நாற்பது.pdf/15&oldid=1030971" இலிருந்து மீள்விக்கப்பட்டது