பக்கம்:அங்கும் இங்கும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100


சோவியத் நாட்டில் நூல்கள் வெளியீடு மிக அதிகம். நூல்கள் வெளியானதும் விரைவிலே விற்று விடுகின்றனர். மக்கள் ஆர்வத்தோடு நூல்களை வாங்குகின்றனர். ஆட்சி யாளரும் ஆர்வத்தோடு ஊக்குவிக்கின்றனர். எப்படி ? நூல்களின் விலை மலிவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதால்.

சோவியத் மக்களின் படிப்பார்வம் எத்தகையது ?

வெளியாகும் நூல்களில் நூற்றுக்கு இருபதையே சாதாரண மாகப் புரட்டிக்கொண்டே படித்துவிடலாம், மற்ற எண்பதும் கவனித்துக் கற்க வேண்டிய 'சீரியஸ்' பொருள் உடையவை என்பதை விளக்கினார்கள்.

சோவியத் மக்கள், மிகப் பெரும் அளவில் பொருள் உடைய நூல்களையே வாங்கியோ, எடுத்தோ படிக்கிறார்கள்; மக்கள் கல்வி வீண் போகவில்லையென்பதற்கு, இது மற்றோர் அடையாளம்.