பக்கம்:அணியும் மணியும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

மனச்சான்று சிறிது மங்கிவிடுகிறது; அவள் வளர்த்து வந்த புகழையும் தன்னலத்துக்கு இழந்துவிடத் துணிகிறாள். பண்பும், நெறியும். தவமும், வீரமும் மாறுபட்டாலும் உலக வழக்கத்தை மாற்றமுடியாதே என்று நினைக்கிறது தன்னலப்பட்ட அவள் நெஞ்சம். பண்பு மாறினாலும், நெறி பிறழ்ந்தாலும், தவமும் வீரமும் நெகிழவிட்டாலும், மூத்தோர் ஆளும் வழக்கமுறையை மாற்றுதல் முடியாதே என்ற எண்ணம் அவள் உள்ளத்தில் மெல்லக் கிளைக்கிறது. மூத்தவனான இராமன் இருக்க இளையவனான பரதனுக்கு ஆட்சி எவ்வாறு கிடைக்கும் என்று அவள் உள்ளம் நினைக்கிறது. அவளைக் கண்டிப்பது போலத் தன் உள்ளத்தில் தன்னலத்தை மூடியிருந்த திரையை நாகரிகமாக விலக்கிக் காட்டுகிறாள். புகழ்மீது உள்ள ஆவலைக் காட்டுவதைப்போல் பரதனுக்கு ஆட்சி கேட்பது வரன் முறையாகுமா என்ற நாட்டுச் சட்டத்தின் அமைப்பின் சிக்கலைத் தெரிந்துகொள்ள முனைகிறாள். பரதன் ஆட்சிக்கு வருவது அரச நெறியாகுமா, அவ்வாறு வருவதற்கு அரச நீதியிடங்கொடுக்குமா என்று தெரிந்துகொள்ள விழையும் உள்ளத்தைக் கைகேயி மந்தரைக்கு நன்கு காட்டிவிடுகிறாள்.

பிறந்திறந்துபோய்ப் பெறுவதும் இறிப்பதும் புகழேல்
நிறந்தி றம்பினும் நியாயமே திறம்பினும் நெறியின்
திறந்தி றம்பினும் செய்தவம் திறம்பினும் செயிர்தீர்
மறந்தி றம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ

- 165


வரன்முறை திறம்பினால் புகழுக்கு இழுக்கு நிகழாதோ என்று சுட்டிக் காட்டுபவளைப் போலத் தன்னலம் தலையெடுப்பதற்குத் தடையாக உள்ள வரன்முறை பற்றிய நெறியைச் சுட்டிக் காட்டுகின்றாள்.

நீதிக்கும் நெறிமுறைக்கும் மாறுபட்டுப் பேசுவதால் வரும் ஏதம் அவள் நினைவுக்கு வருகிறது. நாட்டின் சட்டம்