பக்கம்:அமிர்தம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதற்பதிப்பு:

அக்டோபர் 1951


அமிர்தமும் நானும்......! அமிர்தம்

அதன் அமுதச் சுவையில் என்னே மறந்து நான் மகிழ்ந் தேன்- மகிழ்கிறேன். மகிழ்விற்குக் காரணம் என் கதைத் தொகுப்பு என்ற பாசம் அன்று ‘அமிர்தம் உள்ளடக்கி யிருக்கும் கதைகள் அழகுற அமைந்து விட்டன என்ற பெருமிதம் தான்! பெருமிதம் விளைந்த மகிழ்வில் நான் என்னையும் மறந்து மகிழ்ந்தேன்- மகிழ்கிறேன் !

என் 'எழுத்தில்' அக்கரைகாட்டி ஊக்குவிக்கும் பத்திரிகைக்காரர்கள்-என் பெயரில் ஒரு 'கண்' வைத்து ஆதரவு நல்கி வரும் தமிழன்பர்கள்-இவர்கட்கு என் அன்பின் காணிக்கை இந்த என் இரண்டாம் படைப்பு !

அமிர்தம் கொண்டுள்ள சிறு கதைகள் பொன்னி , சுதேசமித்திரன், குமுதம், கல்கி, தினமணிக்கதிர், காண்டியம் முதலான பத்திரிகைகளில் பிரசுரமானவை. அவற்றைப் புத்தகத்தில் இணைத்துக் கொள்ள அன்புடன் அனுமதித்த ஆசிரியர்களுக்கு என் நன்றி உரியது.

“அமிர்தம் சுவைபெற அணிந்துரை’ வழங்கிய தமிழ் நாட்டின் சிறந்த எழுத்தாளரும் என் இலக்கிய வழிகாட்டியுமான நண்பர் திரு. விந்தன் அவர்களுக்கு என் வணக்கம் நன்றி !

'அமிர்தம்’ வெளிவரச் செய்த அழகுப்பதிப்பக'த் தாருக்கும் புத்தகம் வெளிவர எல்லா வழிகளிலும் உதவிய அன்பர் திரு. கரு. சிதம்பரம் அவர்களுக்கும் என் நன்றி ! அமிர்தச் சுவை காணத்துடிக்கும் உங்கள் ஆர்வங் கண்டும், இனியுமா வளர்த்துவது?...

வணக்கம். விலை யூ.1-0-0 பூவை: எஸ். ஆறுமுகம்

  1. ரா. ராஜா (பேச்சு)ரா. ராஜா
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/4&oldid=1355634" இலிருந்து மீள்விக்கப்பட்டது