பக்கம்:அமிர்தம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பலூன், ரொட்டி எல்லாம் வாங்கி வருவாங்க. எங்கே சோற்றைச் சாப்பிடு’ என்று ‘தாஜா’ செய்தவாறு மகளுக்குச் சோற்றை ஊட்டினுள்.

சம்பாதிக்கவா அவள்.கணவன் போயிருக்கிறன்? அவள் நெஞ்சம் எதிர்க் கேள்வி கேட்டது. பொய்யைக் கற்பித்து, குழந்தை உள்ளத்தை ஏமாற்றிவிட் டதை எண்ணி வருத்துவதைத் தவிர அவளுக்கு வேறு மார்க்கம் புலப்படவில்லை. காவேரியின் கண்கள் கலங்கின. 

“தெய்வமே ஒன்றும் தெரியாத மகளுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? எங்கள் கலி தீர மச்சான் விடுதலை கிடைத்துச் சிக்கிரம் வந்துவிடுமா? மாரியாத்தா! கட்டாயம் மாவிளக்குப் போடுறேன். தாயே...” என்றெல்லாம் வேண்டிக்கொண்டாள்.

உள்ளமும் உள்ளமும் பேசிக்கொண்டதின் பேரில், நாலுபேர் அறியக் காவேரியின் கழுத்தில் தாலியைக் கட்டினன் மாணிக்கம். வாழ்க்கை சுகமுடன் நடந்தது; ஏழ்மையில் இன்பம்! முள் ரோஜாவிலிருந்துதானே உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சுகந்த மணம் எழுகின்றது!

காலச்சக்கரம் சுழன்றது. காவேரியும் மாணிக்கமும் ஆக இருந்த குடும்பத்தில் மூன்றாம் நபர் ஒன்றும் அங்கீகாரம் பெற்றது. கோதையின் ஜனனம் தம்பதிகள் வயிற்றில் பால் வார்த்தது. என்றாலும் அடுத்த வருமே அப்படிப்பட்ட எதிர்பாாாத விளைவு நேரிடுமென்று யாரும் நினைக்கவில்லை. மூன்று பேர்களுக்கு வகை சொல்லி நாளே ஒட்ட வேண்டியது மாணிக்கத்தின் பொறுப்பல்லவா ? அதற்காகவே அம்முயற்சியிலும் ஈடுபட்டான். அங்கிருந்து பதினேந்து மைல் தொலைவிலிருந்து ரகசியமாக அரிசி வாங்கிச் சுமந்து லாபத்திற்கு விற்று ஜீவனம் நடத்தினர். சிலர். அவர்களில் மாணிக்கமும் ஒருவன். விடியற்காலையில்18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/20&oldid=1444413" இலிருந்து மீள்விக்கப்பட்டது