பக்கம்:அமிர்தம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலகம், புரியாத புதிர். அதனூடே நிழலாடும் உண்மை, புரிந்த புதிர் ஆனால் உலகமும் உண்மையும் பிரதிபலிக்கும் ‘முடிவு’ சிந்தை பிழியச் செய்யும் வித்தை மிகுந்ததாக அமைந்துவிடுகிறது. அப்படியென்றால் அந்த முடிவின் முடிவு, புதிரின் புதிர்தானே?........

தங்கவேல் பொன் அருவியின் கழுத்தைப் பார்த்தான். மங்கலச் சின்னம் பரிணமிக்க வேண்டிய கழுத்து சூன்யமாகத் தோற்றமளித்தது.

தாலி பாக்கியம்


கொத்து வேலை முடித்து வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தான் தங்கவேல். முகத்திசையில் நாள் முழுதும் வேலைசெய்த களைப்பின் அயர்வு; நெற்றியில் முத்து முத்தாக அரும்பிக் காய்ந்துபோன வியர்வைத் துளிகளின் உவர்க்கோடு; உள்ளத்திலே ஆசை வள்ளியைக் காணப் போகும் புள்கிதம்.

சந்தின் திருப்பத்தில் தன்னை எதிர்கொண்டழைப்பவள் போலச் சட்க்கென்று முன்வந்து நன்ற பொன்னுருவியைக் கண்ட தங்கவேல், சிலகணம் திகைப்பூண்டை மிதித்தவன் போலச் சித்தம் தடுமாறிப் போனான். அப்போது உண்டான அதிர்ச்சி நீங்கப்பெறச் சற்று நேரமாயிற்று. எதிரும் புதிருமாக கின்று கொண்டிருக்கும் பொன்னுருவியை “வா!” என்று கூட அழைக்கவில்லையே என்று அப்போதுதான் கினைத்துக் கொண்டான் அவன்.

“பொன்னுருவி! பொழுது சாயப்போவுதே; எங்கே இந்த நேரத்திலே புறப்பிட்டுட்டே?”

இப்படி நேருக்கு நேராக நின்று அவளுடன் பேசிக் கச்சிதமாக வருஷம் இரண்டு ஆகப்போகிறதே! அந்த நாட்-

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/49&oldid=1321984" இலிருந்து மீள்விக்கப்பட்டது