பக்கம்:அமிர்தம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“நிஜமாகவா, காவேரி செட்டியாரு? என்னே வேண்டு மென்று காட்டிக் கொடுத்துவிட்டார் என்கிற கோபத்திலே அவர் மேலே பழி வாங்கனும் என்று நாளே எண்ணிக் கொண்டல்லவா இருந்தேன். தேசத்திலே அரிசிச் சோறு எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கனும் என்று சொல்லறப்போ நான் இந்த மாதிரி கள்ள வியாபாரம் பண்ணியதும் தப்புத்தான். ஆனாலும் இத்தனே நாள் வேறு ராஜாங்கம் நடந்தது; ஆனால் இன்றையிலிருந்து நம்ம ராஜாங்கம்; இனி உண்மையாக நடந்து, உடல் உழைத்துச் சம்பாதித்திச் சாப்பிடணும். இப்படி விரதமெடுத்துக்குவோம். ஆனால் இன்றைக்கு உன்னைக் காணுவிட்டால் என்ன் திவினை நேர்ந்திருக்குமோ? காவேரி, அந்தப் புண்ணியவதி மாங்கல்யத்துக்கு உலை வைக்க நினைத்து வந்த நான் எப்படி அவங்க முகத்திலே விழிப்பேன். ஊஹூம்; மாட்டேன். நான் முதலில் வீட்டுக்குப் போகிறேன்” என்றான் மாணிக்கம் உணர்ச்சியுடன்.

கண்களில் வசம்பு கட்டியிருந்த கண்ணிசை விலக்கி விட்டு, தன் மகளே வாங்கி முத்தமிட்டான் மாணிக்கம். அடுத்த நிமிஷம் புறப்பட்டான்.‘மச்சா’ னின் மாற்றத்தைக் கண்டு வாயனடத்துப் போனாள் காவேரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/24&oldid=1195348" இலிருந்து மீள்விக்கப்பட்டது