பக்கம்:அமிர்தம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொட்டும் இரத்தக் கண்ணிரை அவர்களெல்லாம் அறிவதில்லை. அண்மையில் ‘பலித்தடை மசோதா’ நம் சர்க்காரில் சட்டமாயிருக்கிறது. இது சர்க்கார் உத்தரவு; பலியின்றித் தான் உங்கள் விழாவைக் கொண்டாட வேண்டும்... ... ... " என்றான் ஒரு போலீஸ்காான்.

கூடியிருந்தவர்கள் மெய்சிலிர்த்தனர்.

அப்புறம் கேட்பானேன்? பலி இல்லாமலே தேரோட்டத் திருநாள் சுபமாக முடிந்தது. அவ்வளவு உயிர்களும் பிழைத்து மறுவாழ்வு பெற்ற விந்தையை வியந்தாள் வடிவு. பலியை நிறுத்த வேண்டி முன்னமேயே. அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்ததும் வீரப்பனின் தலைமையில்தான் என்பது யாருக்குத் தெரியும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/40&oldid=1310393" இலிருந்து மீள்விக்கப்பட்டது