பக்கம்:அமிர்தம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலம் மாறியது. சங்கரனுக்கு சுந்தரியின் நினைவு மாறவில்லை. .

‘உலகப் பொருள் அனைத்தும் ஒன்றை யொன்று தழுவித்தான் வாழமுடியும்.’

கவிஞன் ஷெல்லியின் கூற்றாயிற்றே இது ! பின் கேட்கவேண்டுமா ? சங்கரன் சரளாவைக் கைப் பற்றினன். சரளா தனக்கு முன்பின் தெரியாத இடத்தில்,புகாத இடத்தில் அடியெடுத்து வைத்தாள். சுந்தரிக்கு எவ்விதத்திலும் அவள் குறைந்தவளல்ல. சுந்தரிக்கு இனித்தான் மனைவினே. அதற்குத்தான் அழைப்பு.

சரளா எழிலணங்கு. சங்கரனேப் பதியாகப் பெற்றதில் எவ்வளவோ பெருமைப்பட்டாள்; பெருமிதமும் கொண்டிருந்தாள். ஆனால், நாளாக நாளாக ஏனே ஒரு மாதிரியாக, எதையோ பறிகொடுத்தவன் போல, எப்பொழுதுமே காணப்பட்ட கணவனின் நிலைஅவளை வெகுவாகப் புண் படுத்தியது. . . .
அன்புடன் அண்டினல் ஆதரவு கூடிய ஒரு இன்சொல் இல்லை; தாபத்துடன் நோக்கிவிட்டால் தயவான ஒர் புது மொழி கிடையாது. வாழ்க்கை-தாம்பத்தியம்; ஊடல்-கூடல்! ஆம்; எதிலும் விரக்திதான சங்கரனைப் பொறுத்த அளவிலே! 

ஆனால் அந்த ஒரு நாளில்--! ‘சரளா’. ‘அம்மா’ ‘நாழி ஆய்விட்டதே, மாப்பிள்ளே வீட்டார்கள் வரும் நேசமாய்விட்டதே. சீக்கிரம் உடுத்திக்கொண்டு தயார் செய்.’ ‘சரளா’ அழைப்பு பறந்தது. மாப்பிள்ளை தன்னை எடை போட்டு ‘ஜட்ஜ்மெண்ட்’ சொல்லவிருக்கும் யாரோ ஒர் இளைஞன் எங்கிருந்தோ அப்பாவின் சம்மதத்தின்பேரில் வந்திருக்கிறார் என்று நினைத்துப் பார்க்கையில் அவளுக்கு இனம் புரியாத பரபாப்பு பரவியது.11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/13&oldid=1191571" இலிருந்து மீள்விக்கப்பட்டது