தைப் பார்வையிட்டாள். கண்களை அகல விரித்துக்கொண்டு படுக்கையில் படுத்தவாறே அந்தப் பக்கம் நோக்கியபடியே இருந்தாள். ‘தன் கணவன் எப்போது வந்தார். இப்போது அந்த அறைக்கு எழுந்துபோவானேன்’ என்பதெல்லாம் அவளுக்குத் திகைப்பாக இருக்கது. அவன் அந்த அறைக்குள் சென்று சில நிமிஷங்கள் இருக்கும். அந்த அறையிலிருந்து கிளம்பும் சப்தம் மூலம், நடப்பதை அறிய முயன்றுகொண்டிருந்தாள் அவள். படீரென ஒரு சப்தம் கேட்டது. அடுத்த விநாடி ஏதோ ஒன்று தெறித்து விழுந்த சப்தம். ஒரு கம்பி தெறித்து மற்றாெரு கம்பியில் அடித்து கிளம்பும் ஒரு நாதம்!
அவள் சுருண்டு எழுந்து படுக்கையில் உட்கார்த்தாள் .
“ஆமாம் வீணையின் மற்றாெரு கம்பியை அவர் அறுத்துவிட்டிருக்கிறார் இனி அந்த வீணே பயன்படக்கூடா தென்று! தான் செய்த அதே காரியம் அவர் மனதிலும் தோன்றி.........”
வாஸ்ந்தி எழுந்தாள். படுக்கையிலிருந்து எழுந்து, அந்த அறையை நோக்கிச் சென்றாள். அதே தருணம், மூர்த்தியும் அந்த நிலைக்கு வந்து சேர்ந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“வாஸ்ந்தி! இனி அந்த வீணையை நீ தொடவேண்டிய சந்தர்ப்பம் வரவே வாாது!” என்றான் அவன்.
வாஸந்தி அவன் தோள்மீது கையை வைத்து லேசாகச் சிரித்தாள்.
“எற்கனவே அது பயன்படாததாகிவிட்டது.”
“வாஸந்தி! என்ன சொல்கிறாய்?”
84