இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நடுங்கும் கைகளுடன் அவளிடம் லதாவின் அந்தக் கடிதத்தைக் கொடுத்தேன். சிறு குழந்தைபோல வாசிக்கத் தொடங்கிவிட்டாள் சுஜாதா.
உடனே புறப்பட்டு ஆஸ்பத்திரியை அடைந்தேன் சுஜாதாவுடன், லதா சுருண்டு கிடந்தாள். அக்காட்சியைக் கண்டதும் எனக்கு இதயத் துடிப்பே நின்றுவிட்டது போலாயிற்று. லதாவைப்பற்றி அருகில் நின்ற நர்ஸிடம் கேட்டேன். அவள் உதட்டைப் பிதுக்கினாள். என்ன ஏமாற்றம்? அரவம் கேட்டு மெதுவாக மூடியிருந்த கண்களைத் திறந்தாள் லதா இதழ்கள் அசைந்தன. ஆனால் வார்த்தை ஒன்றுகூட வெளிக் கிளம்பவில்லை. என்னையும் சுஜாதாவையும் ஒருமுறை ஆர்வத்துடன் நோக்கி, சமீபமாக வரும்படி சமிக்ஞை காட்டினாள். அவளுடைய கைகள் என் கையையும் சுஜாதாவின் கையையும் அன்புடன் இணைத்தன. அப்போது அவள் முகத்திலே ஒருவித காந்தி மின்னல் போலத் தோன்றி மறைந்தது. மறுகணம் அவள் இமைகள் மூடிவிட்டன!
63