அவன் குரலில் இன்பம் கொஞ்சியது. தாபம் தடம் பதிந்திருந்தது.
தண்ணீர் சொட்டும் சேலையைப் பிழியக்கூட கினை வின்றித் தீவிர யோசனையில் ஈடுபட்டாள் பூங்கொடி. மறு கணம் அவள் தலை கீழே கவிழ்ந்தது. தீர்க்கமான முடிவின் அடையாளமா அத்தகைய நாணம்?
ஆமாம். உயரப் படர்ந்து செல்லவேண்டிய துவளும் கொடி ஒன்றிற்கு நல்ல கொழுகொம்பு கிடைத்தால் அப்புறம் அதன் வளர்ச்சிக்குக் கேட்கவும் வேண்டுமா?
★
அவள் பெயர் பூங்கொடி. பூங்கொடி! நாசுக்கான பெயர். அழகுக்கேற்ற பெயர்; பெயருக்கேற்ற பொருத்தம்.
கருவேப்பிலைக் கொழுந்து போன்ற தன் ஒரே பெண்ணைக் கண்ணுங் கருத்துமாக வளர்ப்பதில் தன் அருமை மனைவி இறந்த ஆறாத் துயரத்தையும் மறக்க முயன்றார் கோனார். கருப்பையாக் கோனார் பூவத்தக்குடி சுற்று வட்டாரத்தில் ஒரு பெரும் புள்ளி. அவரால் கை தூக்கி விட்ப்பட்டு முன்னுக்கு வந்த குடும்பங்கள் அனந்தம். இவ்வளவிற்கும் மனுஷன் சொம்பவும் ‘சுவாகி’. கொஞ்சம் கூட ‘கெடுபிடி’ இல்லாதவர். பதவிசான குணம். ஆனல் நல்ல மனிதர்களுக்குத்தான் இந்தப் பாழும் உலகில் காலமில்லையே!
பூங்கொடி என்றென்றும் செல்லப் பெண்ணாகவே வளர்க் கொடுத்து வைக்கவில்லை. கோனாருக்கு இாண்டு நாள் லேசாக ஜுரம் கண்டதாம். வர் வர காய்ச்சல் பலமாய்ப் போய்விட்டது. சாசுவதமாகக் கண்களை மூடிவிட்டார் கோனார். ஆனல் அவரது ஆவி ஒடுங்கும்வரை அவருக்கு அந்த ஒரே கவலைதானாம். தன் செல்லப் பெண்ணின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து வடித்த கண்ணீரைக் கணக்கிடவே முடியாதாம். பாவம், ஒரே மகள்!
69