பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. ஆலமரத்தடியில்

ட்சுமி தன் பாட்டியுடன் சில நாட்கள்தான் தங்கினாள்; என்றாலும் அது நல்ல வாய்ப்பளித்தது. பள்ளியைப் பற்றியோ மற்ற காரியங்களைப் பற்றியோ முன்பிருந்த கவலை திடீரென்று குறைந்து விட்டதாக ஜூடி உணர்ந்தாள்; காரியங்கள் செய்ய இப்பொழுது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. ஜான் இல்லையே என்ற உணர்ச்சியும் அவ்வளவு அதிகமில்லை; இந்தியாவிலிருப்பதைப் பற்றி முன்பிருந்ததைவிட அதிகமான மகிழ்ச்சியும் கொண்டாள். லசல்டிமி சினிமா நட்சத்திரங்களை வெறுத்தாள் ; சும்மா பார்த்துக்கொண்டிருப்பதில் அவளுக்கு விருப்பமில்லை ; ஏதாவது செய்யவே அவள் விரும்பினாள். நீரில் முழுகித் தவிப்பவர்களின் உயிரை அவளால் காப்பாற்ற முடியும். நீந்துவதில் அவளுக்கு மிகுந்த திறமை உண்டு. எலியட் கடற்கரையில் மோதுகின்ற அலைகளினிடையே அவள் பாய்ந்து வருவாள். இந்தியாவின் வரலாற்றிலே பள்ளிப் புத்தகங்களில் இல்லாத பல உணர்ச்சியூட்டும் விஷயங்கள் அவளுக்குத் தெரியும். மேலும், ஆஹா, அவள் ரொம்ப அழகு! ஜூடி வழக்கமாக எல்லோரிடத்திலும் அளவு